நான் படித்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
செம்மொழித் தமிழின் தனித்தன்மை
By முனைவர் மு. பழனியப்பன்
தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என்ற இரண்டு வகையில் முத்த திராவிட மொழியாக விளங்குவதாவும் சிறப்பு பெற்றிருப்பது தமிழாகும். இதன் எழுத்துக்கள், சொற்கள், பாடுபொருள்கள், செய்யுளின் யாப்பு வகைகள் முதலியன தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும். இத்தனிச்சிறப்புகளை எடுத்து மொழிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலாவதாக தமிழ் ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதம் ஆகிய வடமொழியில் இருந்துத் தனித்தன்மை வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. இதனைத் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்ததாக அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இருப்பினும் வடமொழி தமிழுக்குச் செவிலித் தாய் போன்றது என்று மொழியும் அறிஞர்களும் உண்டு. இவர்களுள் குறிக்கத்தக்கவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். இவர் "தமிழ்மொழியை வடமொழி போஷித்து வந்திருக்கிறதென்பது முன்று வாயில்களால் அறியலாகும். அவை. 1. தமிழிலுள்ள சொற்கள், 2. தமிழ் நூல் விஷயங்கள், 3. தமிழிலக்கிய மரபு என்பனவாம் ( வையாபுரிப்பிள்ளை, வடமொழியும் தமிழும், ஆராய்ச்சிக் களஞ்சியம் தொகுதி. 7. ப. 194) இக்கருத்தின்படி தமிழுக்கும் வடமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது என்றாலும் அதனைக் காட்டிலும் தமிழ் தனித்தன்மையான பல நிலைகளைப் பெற்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
குறிப்பாக தமிழ் எழுத்து மரபிற்கும், சொல் மரபிற்கும், பொருள் மரபிற்கும், யாப்பு மரபிற்கும் தனிப்பட்ட பல கூறுகள் உண்டு. அவை வடமொழிக்கு அமையாத தனிப்பட்ட கூறுகள் ஆகும். இத்தனிப்பட்ட கூறுகளின் வழி ஆரிய குடும்பத்தைச் சாராத தனித்தன்மை வாய்ந்த திராவிட மொழி தமிழ் என்பது மெய்ப்படும். மேலும் உலக மொழிகளிலும் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது என்பதும் இதன் வழியாக பெறப்படும்.
வடமொழியையும் தமிழையும் ஒன்றாக வைத்துப் பார்த்த நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் பின்வரும் நூற்பாவில் தமிழுக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் எவை எனக் காட்டுகிறார். அதனோடு வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள பொது எழுத்துக்கள் எவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
றனழஎ ஒவ்வும் உயிர்மெய் உயிரளபு
அல்லாச் சார்பும் தமிழ், பிற பொதுவே. (நன்னூல். 150)
இந்நூற்பாவின்படி தமிழ் மொழிக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் " ற, ன, ழ, எ, ஒ '' என்ற ஐந்து எழுத்துக்கள் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் ஆகும். இவற்றோடு பத்து சார்பெழுத்துக்களில் உயிர்மெய், உயிர் அளபெடை தவிர்ந்த மற்ற எட்டு எழுத்துக்களும் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துக்களின் தொகையில் அடங்கும். ஆக எட்டும் ஐந்தும் இணைய பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் ஆகும் என்கிறார் பவணந்தி முனிவர். எஞ்சிய எழுத்துக்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் உரிய பொது எழுத்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை இருபத்தேழு என்பது அவரின் கணக்கீடு ஆகும்.
நன்னூல் ஆசிரியரின் கருத்தின்படி உயிர் 12, மெய் 18, சார்பு எழுத்துக்கள் 10 ஆக நாற்பதாக அமைந்து தமிழ் எழுத்துக்களில் மேற்காட்டிய பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் என்பது உணரத்தக்கதாகும்.
தனித்த இந்தச் சிறப்பு எழுத்துக்கள் உலக மொழிகளை ஒப்பு நோக்கும் போதும் தமிழுக்கே உரிய சிறப்பான எழுத்துக்கள் என்றே கருதத்தக்கனவாகும்.
தமிழின் பாடுபொருள் மரபிற்கும் பல தனித்த கூறுகள் உண்டு. தமிழில் அகம் பாடுதல், புறம் பாடுதல் என்ற இரு மரபுகள் உண்டு. இவற்றுள் அகத்திணை மரபு என்பது தமிழின் தனித்த மரபு ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பாடுபொருள்களைச் சுட்டும் மரபு வடமொழியில் உள்ளது. இதனைச் `சதுர்வர்க்கம் ' என வடமொழியார் குறிப்பர். இருப்பினும் இன்பத்துள் ஒன்றாக தமிழில் அமைக்கப் பெற்றுள்ள அகமரபு என்பது தமிழரின் தனித்த மரபாகும்.
இது குறித்து வ.சுப. மாணிக்கனார் பின்வருமாறு கருத்துரைக்கிறார். " சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார். விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப் பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஒரு அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு. தமிழ் மொழியின் தனி வீற்றினை அயல் மொழியான் உணரவேண்டுமேல் அவனுக்கு முதலில் கற்பிக்க வேண்டும் பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளியிருப்பார்'' (வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 2) என்ற இக்கருத்தின்படி தமிழுக்கு உரிய தனித்த நிலையாக அகம் பாடுதல் என்பது அமைந்துள்ளது என்பது பெறத்தக்கதாகும்.
மேலும் அகத்திணை மரபினை உலக இலக்கிய மரபுகளுள் புதுமை வாய்ந்தது என்றும் அவர் கருதுகிறார். "தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி பெற்றிருக்கும் இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும் பெயராய்ச் சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால் அவ்விலக்கிய வகை அம்மொழியில் அல்லது பிற எம்மொழியிலும் காண்பதற்கு இல்லை என்பதுதானே கருத்துரை. இதனால் உலக மொழிகளுள் தமிழ் மொழியின் தனிச்சிறப்பும், தமிழிலக்கிய வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்'' (மேலது. ப. 23) என்ற இக்கருத்து அகப் பொருள் பற்றிப் பாடும் மரபு உலக மொழிகளுக்கு இடையில் தமிழுக்கான தனித் தன்மை வாய்ந்த மரபு என்பது தெரியவருகிறது.
அகம் பாடுதல், புறம் பாடுதல் என்பனவற்றை திணைப்பகுப்பில் அமைத்திருக்கும் தமிழர் படைப்புத் தன்மை என்பது உலகத்திற்கு புதியது என்று மேலை நாட்டாரும் கருதுகின்றனர்.
"தமிழ்க் கவிதை இயல் வடமொழிக் கவிதை இயலினின்றும் முற்றிலும் மாறுபட்டது. வியப்புக்குரியது. அதனை அறியத் தற்செயலாக வாய்ப்பு கிடைக்கும் மேலை நாட்டினர்க்கு அது இன்ப அதிர்ச்சி ஊட்டும் புதையலாகும். அதில் கவிதை அகமென்றும் புறமென்றும் பகுக்கப் பெற்றுள்ளது. அங்கு ஒரு குறியீட்டுத் திறவுகோலும் மிக மிக மேம்பாடுடைய நிலப்பாகுபாட்டைப் பயன்படுத்தும் உத்தியும் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் வாழும் போலிச் சேதானைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அக்கவிதையியல் இன்றைய நடைமுறைக்கு ஏற்றது. செவ்வியல் சார்ந்த தமிழ்க் கவிதையியல் மேலக் கவிஞர்கள் தரும் வறண்ட வாழ்க்கைத் தத்துவத்திற்கு மருந்தாகி உள்மன இன்பங்களை அதிகரிக்க வல்லது. தமிழில் உள்ள அகத்திணைக் கவிதைகள் சிறுதவறும் இல்லாத பெரிதும் பொருத்தமான உளவியல் அடிப்படை கொண்ட ஓர் அமைப்பிற்குள் இயங்குகின்றன. (மேற்கோள் மார்ட்டின் செய்மர் ஸ்மித், மருதநாயகம், உலக அறிஞர்கள் பார்வையில் செம்மொழித்தமிழ், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், ப. 57) என்ற இந்தக் கருத்து தமிழரின் அகம் பாடும் மரபை உலக இலக்கியங்களில் தனித்தன்மையாகக் காண்கிறது.
எனவே தமிழ் எழுத்தானும், பாடுபொருளானும் தனித்தன்மை வாய்ந்தது என்பது கருதத்தக்கது. ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து இதன் தனித்தன்மையை மெய்ப்பிக்க இந்த இரு கருத்துக்கள் அசைக்க முடியாதனவாகும்.
மற்ற உலக மொழிகளில் இருந்தும் திராவிடக் குடும்பம் சார்ந்த மொழிகள் தனித்த பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன என்பதைக் கமில் சுவலபில் என்ற அறிஞர் எடுத்துரைத்துள்ளார். அவரின் சில கருத்துக்கள் பின்வருமாறு.
திராவிட மொழி அமைப்பு பற்றி அவர் அறிவித்துள்ள அடிப்படைத் தகவல்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளன..
`பெயர் சொற்கள்: திராவிட மொழிகளின் பெயர்கள் பெரிதும் வரையறுக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக பெயர்கள் பால் முடிவுகளை அறிவிக்கும்படியானவையாக இருக்கும். அதனோடு பல்வகை பொருள்முடிவுகளைப் பெறத்தக்க வகையிலான இலக்கணக் கூறுகளை அது நடுவணதாகக் கொண்டிருக்கும் '(.(Kamil v. Zvelebil, Dravidian linguistics – An Introduction,p.19 ) என்று திராவிட மொழிகளின் பெயர்கள் பற்றிய குறிப்புரை தமிழுக்கு மிகவும் பொருந்துவதாகும்.
`வினைச் சொற்கள் : திராவிட மொழிகளின் வினைச் சொற்கள் பற்றிய ஆராய்ந்த டேவிட் டபிள்யு மெகால்பின் என்ற அறிஞர் " வினைச் சொல் என்பது அனைத்துத் திராவிட மொழிகளிலும் அதி முக்கியத்தன்மை கொண்டதாகும். இலக்கண அமைப்பிலும், தொடரியல் அமைப்பிலும் அதற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு '' (மேற்கோள், Kamil v. Zvelebil, Dravidian linguistics – An Introduction,p.28) என்று அறிவித்துள்ள கருத்துரைத் தமிழுக்கு மிகப் பொருந்துவதாகும்.
இவை போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களின் மொழி வரையறைகள் தமிழ் மொழியில் உள்ள சொற்களின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துவனவாகும்.
யாப்பு நிலையிலும் தமிழ் யாப்பு முறை தனித்தன்மை வாய்ந்தது. இதனை மெய்ப்பிக்க வையாபுரிப்பிள்ளையின் பின்வரும் கருத்து உதவும்.
" தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழியிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள இலக்கணமமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா முதலியன தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம். இவைகள் தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும், தொன்று தொட்டு வந்த வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசை இனிமைக்கும் பொருந்துமாறு அமைந்தன. தமிழிற்கே தனியுரிமையென முத்திரையிடப் பெற்று வெளிப்போந்து வீறுற்று உலவின'' ( வையாபுரிப்பிள்ளை, மேலது, ப. 205) என்ற இவ்வாய்வாளரின் கருத்து தமிழுக்கு அமைந்துள்ள தனித்த யாப்பமைதியைப் பற்றியதாகும்.
இவ்வகையில் தமிழ் மொழியின் தனித்த பண்புகள் இவை என உணர்ந்து கொள்ளமுடிகின்றது. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்பினை எடுத்துரைக்கும் பின் வரும் அறிஞர்களின் கருத்துக்களும் தமிழின் தனித்தன்மைக்கு அரண் சேர்ப்பனவாகும்.
தமிழ் இலக்கணத்தின் தனித்தன்மையைப் பொற்கோ பின்வருமாறு குறிக்கின்றார்." உலகிலுள்ள மற்ற மொழியினரும் மற்ற பண்பாட்டினரும் இலக்கணம் என்றால் எழுத்திலக்கணம், சொல்லிணக்கணம், தொடரிலக்கணம் ஆகிய இவற்றைப் பற்றி மட்டுமே கருதுகின்றனர். ஆனால் தமிழ்மரபு இலக்கண எல்லையை இதற்கு மேலும் விரிவு செய்திருக்கிறது.எழுத்து, சொல், தொடர் ஆகியவற்றோடு மொழியில் உள்ள இலக்கியங்களைப் பற்றிய ஆய்வையும் தமிழ்மரபு இலக்கணத்திலேயே அடக்கிக் கொண்டிருக்கிறது. ( பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், ப. 2)
இவ்வகையில் தமிழ் என்னும் மொழிக்கும் , அதனால் மொழியப்பெற்ற இலக்கண இலக்கியங்களுக்கும் தனித்த பல மரபுகள் உள்ளன என்பது தெளிவாகின்றது. இத்தனித்தன்மைகளும் தமிழ் மரபு கட்டிக் காத்துவருகின்றது. இதற்குத் தமிழ் மக்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதும் கருதத்தக்கது.
பயன்கொண்ட நூல்கள்.
1. இளவரசு. சோம., நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
2. பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், தமிழ் நூலகம், சென்னை, 1989
3. மலர்க்குழு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், தமிழ்நாடு அரசு, 20104.
4. மாணிக்கம். வ.சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2007
5. வையாபுரிப்பிள்ளை, எஸ்., ஆராய்ச்சி தொகுதி, தொகுதி .ஏழு, சென்னை 1998.
6. kamil V. Zvelebil, Dravidian linguistics An introduction, PILC.pondicherry 1997
இன்றைய குறள்
Wednesday, February 29, 2012
கோபம் இல்லாத மனைவி தேவையா?-இதோ சில டிப்ஸ்!
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:
1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.
2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.
3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் 'மூடு அவுட்'டாக வாய்ப்பு அதிகம்.
4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.
5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.
8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.
9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.
10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.
11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.
12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.
2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.
3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் 'மூடு அவுட்'டாக வாய்ப்பு அதிகம்.
4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.
5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.
8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.
9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.
10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.
11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.
12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது நான் படித்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது நான் படித்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !
Tuesday, February 28, 2012
தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 6
Superb = அற்புதம்
Fantastic = விந்தையான, வியத்தகு
Terrific = பயங்கரம், திகில் ஊட்டுகிற
Marvelous = வியத்தகு
Tremendous = மிகச்சிறந்த, பெரிய
Excellent = ஒப்பற்ற, மேலான, நிகரற்ற, உன்னத
Spectacle = விந்தை
Extraordinary = அசாதாரணம், அதிவிசேட, வியக்கத்தக்க
Amazing = பிரமாதம்
Fabulous = அபரிதமான
Fantastic = விந்தையான, வியத்தகு
Terrific = பயங்கரம், திகில் ஊட்டுகிற
Marvelous = வியத்தகு
Tremendous = மிகச்சிறந்த, பெரிய
Excellent = ஒப்பற்ற, மேலான, நிகரற்ற, உன்னத
Spectacle = விந்தை
Extraordinary = அசாதாரணம், அதிவிசேட, வியக்கத்தக்க
Amazing = பிரமாதம்
Fabulous = அபரிதமான
உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !
உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !
ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் "நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!.

பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..தேடல் தொடரும்...
நன்றி: செம்மையின் பாலை
ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் "நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!.

பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..தேடல் தொடரும்...
நன்றி: செம்மையின் பாலை
Monday, February 27, 2012
தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 5
எத்தனை வார்த்தைகள். சொல்வதை, பேசுவதை எத்தனை வார்த்தைகளில் சொல்லலாம் என்று தமிழில் இருக்கிறது. வேறு மொழிகளில் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது
விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது
விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது
விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது
வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது
மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?
மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது
பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.
பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது
புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது
புகலுதல்: விருப்பத்தோட சொல்றது
புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது
பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது
பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது
பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது
நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது
நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது
நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது
செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது
சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது
கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...
குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது
குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது
கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது
கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது
கத்துதல்: உரத்துச் சொல்லுதல்
ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது
என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது
உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது
உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது
இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது
இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது
அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது
கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது
அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது
ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது
ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது
கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது
கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது
சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது
சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது
சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது
நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது
நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது
நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது
மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது
நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது
==============================
நன்றி: செம்மையின் பாலை
விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது
விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது
விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது
விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது
வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது
மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?
மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது
பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.
பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது
புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது
புகலுதல்: விருப்பத்தோட சொல்றது
புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது
பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது
பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது
பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது
நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது
நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது
நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது
செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது
சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது
கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...
குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது
குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது
கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது
கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது
கத்துதல்: உரத்துச் சொல்லுதல்
ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது
என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது
உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது
உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது
இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது
இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது
அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது
கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது
அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது
ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது
ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது
கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது
கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது
சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது
சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது
சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது
நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது
நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது
நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது
மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது
நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது
==============================
நன்றி: செம்மையின் பாலை
உங்கள் வீட்டிலும் முயற்சி செய்யுங்கள்...[படித்தது]

வீட்டில் தனியாக இருக்கும் இல்லதரசிகள் மாடித் தோட்டம் அமைப்பதால், மன அழுத்தம் குறைகிறது என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் சாந்தி கூறினார்!!!!!!!!
மாடித் தோட்டம் அமைப்பதால், வீட்டிற்குள் இறங்கும் வெப்பத்தின் அளவில், 4 டிகிரி அளவு குறையும். அதிக அளவு செடி கொடிகள் வளர்க்கும் போது மென்மேலும் வெப்பத்தின் அளவு குறையும். காற்றில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. காய்கறிப் பயிர்கள் மட்டுமின்றி, அருகம்புல், அகஸ்டின் புல், ஜப்பான் புல், கொரியன் புல் உள்ளிட்ட பல்வேறு புல் வகைகளை வளர்ப்பதால், வெப்பத்தின் அளவு அறவே குறைகிறது!!!!!!!!!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில், மாடித் தோட்டம் அமைப்பதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாளில், காலை முதல் மாலை வரை நடக்கும் இப்பயிற்சி முகாமில், மதிய உணவு இலவசம். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உண்டு. கட்டணம் 400 ரூபாய் மட்டுமே. தொடர்புக்கு 044 26263484 !!!!!!!!
கட்டட காடுகளில் விவசாயம்:
உலகில் வளர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளில், மாடித் தோட்டம் என்ற நகர விவசாயம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக வெப்பமயமாதலைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அலுவலகங்களில் மாடித் தோட்டம் அமைப்பதை கட்டாயமாக்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டிய அவசியத்தையும், பயன்களையும் உணரும் வகையில் மாடித் தோட்டம் அமைக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர். எல்லாராலும் முடியும் எளிய வகையில் அமையும் இத்திட்டத்தில், இதுவரை 15 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
உபயோகமற்றவற்றின் உபயோகம்:
உபயோகப்படாது என்று நாம் ஒதுக்கி வைக்கும் பல்வேறு பொருட்கள், மாடித் தோட்டத்திற்கு உபயோகமாகும். குறிப்பாக வாட்டர் பாட்டில், சிமென்ட் தொட்டி, உடைந்த மக், தண்ணீர் குவளை, உபயோகப்படாத வாஸ்பேஷன், மரத்தாலான பீப்பாய், தட்டையான கொள்கலன், தகர டப்பா, பழைய டிரம் உள்ளிட்ட பொருட்களில் மண் நிரப்பி, பயிர்கள் வளர்க்க பயன்படுத்தலாம்.
சத்தான காய்கறிகள்:
மாடித் தோட்டம் அமைப்பதால், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம். வயல்வெளிகளில் விரைவில் விளைச்சல் காணவும், அதிக உற்பத்தியை பெருக்கவும் பூச்சி மருந்துகளையும், பல்வேறு நவீன உரங்களையும் இடுகின்றனர். இதனால், காய்கறிகளில் இருக்கும் இயற்கைச் சத்துக்கள் அருகி வருகின்றன. ஒரு மனிதன் தினமும், 300 கிராம் காய்கறிகளையும், 85 கிராம் பழங்களையும் உட்கொள்ள வேண்டும். ஆனால், பொருளாதார தேவை கருதி சாப்பிடுவதில்லை. மாடித் தோட்டம் அமைக்கும் போது, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம்.
மாடியில் மருந்தகம்:
வீட்டின் மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பவர்கள், மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாம். குறிப்பாக அகத்தி, ஆடுதின்னாப் பாலை, ஆடாதொடை, இஞ்சி, ஊமத்தை, எலுமிச்சை, துளசி, ஓமவல்லி, கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, பிரண்டை, கீழாநெல்லி, சிறுகுறிஞ்சான், திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி உள்ளிட்ட மூலிகை பயிர்களை வளர்ப்பதன் மூலம் காமாலை, இருமல், காய்ச்சல், கண் புகைச்சல், வாய்ப்புண் போன்ற நோய்களை தவிர்க்கவல்ல பல்வேறு விதமான பயிர்களை வீட்டிலே வளர்ப்பதால், பின்விளைவுகள் இல்லாத இயற்கை மருந்துகள், எளிதாக நமது வீட்டு மாடியிலேயே கிடைக்கும். மேலும், வீட்டில் வளர்க்கும் மூலிகைப் பயிர்களின் வாசம் நம் வீட்டிற்கு மட்டுமின்றி, அண்டை வீடுகளுக்கும் வீசுவதால், உடல் சுவாசத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.
மன அழுத்தம் குறையும்:
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், இல்லத்தரசிகளும் மாடித் தோட்டம் அமைத்தால், அவர்களின் மன அழுத்தம் குறையும். பயிர்கள் மீது அக்கறையும், வளர்ச்சியும் கொண்டிருப்பதால், இல்லத்தரசிகள் தங்கள் குழந்தைகளைப் போலவே அவற்றை நினைத்துக் கொள்வார்கள். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாத போதும், மனக்குமுறலை வெளியில் சொல்ல நினைக்கும் போதும், இத்தோட்டம், அவர்களுக்கு நல்லதொரு துணையாக அமையும் என்கின்றனர், உளவியலாளர்கள். பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவதாலும், அவற்றை கவனிக்கும் போதும், மாடித் தோட்டம் மிகச் சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது.
வெயில் தாக்கம் குறையும்:
மாடித் தோட்டம் அமைப்பதால், வீட்டிற்குள் இறங்கும் வெப்பத்தின் அளவில், 4 டிகிரி அளவு குறையும். அதிக அளவு செடி கொடிகள் வளர்க்கும் போது மென்மேலும் வெப்பத்தின் அளவு குறையும். காற்றில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. காய்கறிப் பயிர்கள் மட்டுமின்றி, அருகம்புல், அகஸ்டின் புல், ஜப்பான் புல், கொரியன் புல் உள்ளிட்ட பல்வேறு புல் வகைகளை வளர்ப்பதால், வெப்பத்தின் அளவு அறவே குறைகிறது.
அரசு பயிற்சி:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில், மாடித் தோட்டம் அமைப்பதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாளில், காலை முதல் மாலை வரை நடக்கும் இப்பயிற்சி முகாமில், மதிய உணவு இலவசம். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உண்டு. கட்டணம் 400 ரூபாய் மட்டுமே. தொடர்புக்கு 044 26263484
நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம், மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம்
நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம், மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம் - இரா.சம்மந்தனின்
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் பொது மண்டபத்தில் நடைபெற்ற” “ஜனநாயக அடிப்படையில் அரசியல்சமுக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று காலை 9மணிதொடக்கம் 4.30மணிவரை நடைபெற்றது
இதில் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனின் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையின் முளுமையான வடிவம்.
இறமை என்பது மக்களுக்குரியது அது மக்களிடமே இருக்கவேண்டும் இறைமை என்ற சொல் 3அம்சங்களை கொண்டிருக்கின்றது. முதலாவது ஆட்சி அதிகாரங்கள்(சட்டத்தை ஆக்கும் அதிகாரம் நிர்வாக அதிகாரம் நீதி தொடர்பான அதிகாரம்) 2ம் அம்சம் அடிப்படை உரிமைகள் மனிதவுரிமைகள் 3ம் அம்சம் வாக்குரிமை ஜனநாயகத்திற்கு உயர் கொடுப்பது வாக்குரிமை அப்போது ஒரு நாட்டில் இறைமையுள்ள மக்களாக தமிழர்களும் தமிழ்பேசும் மக்களும் வாழவேண்டுமானால் இறைமை என்ற சொல்லில் அடக்கப்படுகின்ற மூன்று அம்சங்களும் ஏதோவொரு வகையில் கிடைக்கப் பெற்றிருக்கவேண்டும்.
இவ்வற்றில் ஏதாவது ஒன்றோ முளுவதுமாகவோ அல்லது அர்த்தமான வகையில் கொடுக்கப்படாவிட்டால் அவர்களது இறைமை மறுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் எல்லாம் நடந்து வருகின்றது. 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் தொடக்கம் எமது மக்கள் தமது ஜனநாயக தேர்தல்களை பயன்படுத்த இந்த நாட்டில் என்னவகையான தேர்தல் இடம்பெறவேண்டும் என கூறிவருகின்றனர். அதாவது இந்தநாட்டிலுள்ள ஒற்றையாட்சி முறை நாம் சமபிரஜைகளாக வாழமுடியாது. எனவே அது நீக்கப்பட்டு சமஸ்டி முறை உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் அல்லது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசியல் சாசன ரீதியாக ஓழுங்குகள் செய்யப்படவேண்டும்.
அதன் மூலம் தமது இறைமையை பயன்படுத்த விரும்புகின்றோம் என சொல்லிக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தேர்தல்மாகாணசபைத்தேர்தல் உள்ளுராட்சித்தேர்தல் என அதை;துத்தேர்தல்களிலும் தேர்தல்களில் சொல்லியிருக்கின்றார்கள். அது அவர்களது ஜனநாயக உரிமை. அதை மதிக்கவேண்டியது அரசின் உரிமை அதில் தவறுமாயின் அந்த மக்களின் இறைமை மறுக்கப்படுகின்றது. மற்றவர்களுக்குள்ள உரிமை பெரும்பான்மையினருக்குள்ள உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
பெரும்பான்மை இனம் தாம் பெரும்பான்மையாக உள்ளகாரணத்திற்காக சிறுபான்மை இனத்தை ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறு புர்pந்தால் அந்த சிறுபான்மையினருக்கு மாறாக அந்த சிறுபான்மை இனத்தின் இறைமை மறுக்கப்படுகின்றது. இதுவே இங்கு நடந்தது. அதனாலேயே இங்கு போராட்டங்களும் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டன. ஒரு நாட்டில் வௌ;வேறு இனங்கள் மக்கள் வாழ்வதாக இருந்தால் அவ்வகையான மக்களுக்கு இயைவாக இருக்கவேண்டும்.
இந்தியாவில் பலமொழிபேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் உட்பட பல இனம்சார் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு கணிசமானளவு தமது பிரதேசங்களில் அந்தந்த மொழி பேசும் மக்கள் கலாச்சாரம் பாரம்பரியங்கள் கொண்ட மக்கள் தமது பிரதேசங்களை ஆள்கின்றனர். ஆனால் ஆனால் அது முளுமையான சமஸ்டி அல்ல. ஆனால் அதிகாரம் பகிரப்பட்டிருக்கின்றது சட்த்தை ஆக்கும் அதிகாரம் மனிதவுரிமைகள் தொடர்பான அதிகாரம் தமது ஜனநாயக உரிமையூடாக ஆட்சி ஒழுங்குகளை தாங்களே பராமரித்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இதுவே முக்கிய பிரச்சினை
நாம் ஜனநாயக ரீதியாக 30வருடம் போராடினோம் தந்தை செல்வா அவர்கள் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களை செய்து கொண்டார். அவை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாட்டில் யுத்தம் தோன்றியிருக்காது. பண்டா செல்வா ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதன் மூலம் நாம் அரச அதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் நாம் போராட்டம் செய்து ஸ்தம்பிக்கச் செய்தோம்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்ற தந்தை செல்வா தள்ளப்பட்டார் ஏறத்தாள 30வருடம் வேறு வழியில் இந்தப் பிரச்சினையை தீர்க்க போராடினார். 45ம் ஆண்டு பா.உ தேர்தலில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வழவேண்டும் எனக் கேட்டிருந்தார். நாம் 77ம் ஆண்டு பாராளுமன்னத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அண்ணன் அமிர்தலிங்கம் இந்திரா காந்தி கூறிய கருத்தின் அடிப்படையில் அதாவது தனிநாடு கோரினால் நாம் உதவ முடியாது ஆனால் நியாயமான சுயாட்சி முறைக்கு வந்தால் உதவமுடியும் என்றார். அதன் பின்னர் பா.வெளியேயும் உள்ளேயும் தனிநாட்டுக்கு நிகராக நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை நீங்கள் தரத்தயாராக இருந்தால் நாம உங்களுடன் பேச தயார் என் அதற்காக நாம் உழைத்திருக்கின்றோம்.
அவ்விதமான தீர்வொன்று ஏற்படாமையினால்தான் யுத்தம் வெடித்தது காரணம் இல்லாமல் ஒரு யுத்தம் ஆரம்பிக்கவில்லை காரணமில்லாமல் யுத்தம் ஆரம்பிக்கவில்லை அந்தக்காலத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம் இந்திரா காந்தியை சந்தித்தோம். பல முயற்சிகளை எடுத்திருந்தோம் இந்தி.இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தம் ஏற்படுத்தப்பட்டது ஆதை நாம் ஒருபோதும் ஏற்கவில்லை 87ம் ஆண்டு ஜப்பசி மாதம் அமர் சிவசிதம்பரம் நான் கடிதமொன்றை எமது மக்களின் அபிலாசைகளிற்கொரு தீர்வாக ஏடுக்கமுடியாதென தெரிவித்திருந்தோம்.
ஆனால் இன்று யுத்த பின்னர் நாம் போராட்டத்தின் அடுத்த நிலைப்பாட்டிற்கு நாம் சென்றிருக்கின்றோம். யுத்தம் நடந்ததற்று அடிப்படையான காரணம் தமிழர்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டது ஜனநாயக உரிமைகள் மனிதவுரிமைகள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டது. இவற்றின் காரணமாக இன்று இலங் அரசு சர்வதேச ரீதியாக தான் செய்த ஒப்பந்தங்களை தான் கடைப்பிடிக்கவில்லை அந்த ஒப்பந்தங்களை தானே மீறியிருக்கின்றோம். என விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றது
அது சர்வNதுசத்தின் கடமை ஒரு நாடு ஜ.நா ஒப்பந்தங்களை ஏற்று அதை கைச்சாத்திட்டு அதை அமுல்ப்படுத்த சம்மதிக்குமாயின் அவ்வாறு செயற்படவேண்டியது அந்த நாட்டின் கடமை அதிலிருந்து தவறும் பட்சத்தில் அது தொடபாக விசாரிக்க ஜ.நாவிற்கும் சர்வதேசத்திற்கு உரிமையுள்ளது. அதனடிப்படையில்தான் பல கேள்விகள் எழுப்பப்ட்டுள்ளன. இலங்கையில் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதாக சாட்சிகள் இருப்பதாக திடமாக தெரிவிக்கப்படுகின்றது இதனடிப்படையில் தமிழர் உரிமைகள் மீறப்ட்டதாக ஜ.நா நிபுணர்குழு விசாரணையின் பின்னர் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசினாலும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கையில் கூட தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை குறைபாடுள்ளது. முடி மறைக்க நினைக்கின்றார்கள்
ஒரு அரசியல் தீர்வு இந்த நாட்டில் ஏற்படவேண்டும் ஜனநாயக உரிமைகள் மனிதவுர்pமைகள் மதிக்கப்படவேண்டும். நாம் தமிழ் மக்கள் சார்பாக சர்வதேசத்திடம் கேட்பது இந்த நாட்டில் நாம் வாழ்ந்துள்ளோம் மற்றவர்களைப்போல் அவர்களைவிடவும் நீண்டகாலமாக நாம் வாழ்ந்துள்ளோம் நாம் தனித்துவமான மக்கள் எங்களின் சொந்த பாரம்பரியம் கலாச்சாரம் மொழி சரித்திரரீதியாக வாழ்ந்த வடகிழக்கு மண் அனைத்துமேயுள்ளது. எனவே தொடர்ந்து சம உரிமையுடன் வாழ உரிமை உண்டு
உரிமைகளை கேட்டதற்காக பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம். இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டாலு; மீண்டும் இனப்படுகொலை நடைபெறும் வன்முறை நடைபெறும் அதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது அதிலிருந்து எம்மை பாதுகாக்கவேண்டியது உங்கள் கடமை இதையே பகிரங்கமாக சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை அரசு கையாண்ட வழியை உதாரணமாக கொண்டு இன்னுமொரு நாடு இந்த முறையை கையாள்வதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. பேச்சுவார்தை மூலம் நியாயமான ஓழுங்குகள் மூலம் பிரச்சினை தீர்த்திருக்க முடியும் யுத்ததின் மூலம் தீர்க்க நினைத்தது தவறு என்பதை சர்வதேசம் புரியவைக்கவேண்டும் சர்வதேசத்தின் பணிகளுக்கு எமது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் அதன் மூலம் எமது கலாச்சாரம் சமுக ஜனநாய விருப்புக்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
நாம் இலங்கை அரசிற்குச் சொல்லும் விடயம் இந்த உண்மை எல்லாவற்றையும் நோக்கி கடந்த தைமாதம் தொடக்கம் பேசி வருகின்றோம் நாம் நிதானமாகவும் விசுவாசமாகவும் நடந்துள்ளோம் ஒருமித்த நாட்டிற்குள் எமது இறைமையின் அடிப்படையில் நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வொன்றிற்காக பேசிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நீங்கள் நியாயமாக விசுவாசமாக நடக்கவில்லை ஆனால் எமது மக்களுக்கு ஓரு தீர்;வு தேவை அதனால் பேச்சில் ஈடுபட்டோம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது அது எமது தவறல்ல உங்கள் தவறு ஒப்பந்தங்களை மீறும் வகையில் நிறுத்தியிருக்கின்றீர்கள் இதை சர்வதேசம் புரிந்திருக்கின்றது. எமக்கு நியாயமான தீர்வை இல அரசு பேச்சில் ஏற்படுத்தாவிட்டால் இனிமேல் சர்வதேசம் எந்தெந்த வகையில் தீர்க்கமுடியுமோ அந்தந்த வகையில் தீர்த்து வைக்கவேண்டும் அது அவர்களது கடமை.
நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம். மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் பொது மண்டபத்தில் நடைபெற்ற” “ஜனநாயக அடிப்படையில் அரசியல்சமுக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று காலை 9மணிதொடக்கம் 4.30மணிவரை நடைபெற்றது
இதில் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனின் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையின் முளுமையான வடிவம்.
இறமை என்பது மக்களுக்குரியது அது மக்களிடமே இருக்கவேண்டும் இறைமை என்ற சொல் 3அம்சங்களை கொண்டிருக்கின்றது. முதலாவது ஆட்சி அதிகாரங்கள்(சட்டத்தை ஆக்கும் அதிகாரம் நிர்வாக அதிகாரம் நீதி தொடர்பான அதிகாரம்) 2ம் அம்சம் அடிப்படை உரிமைகள் மனிதவுரிமைகள் 3ம் அம்சம் வாக்குரிமை ஜனநாயகத்திற்கு உயர் கொடுப்பது வாக்குரிமை அப்போது ஒரு நாட்டில் இறைமையுள்ள மக்களாக தமிழர்களும் தமிழ்பேசும் மக்களும் வாழவேண்டுமானால் இறைமை என்ற சொல்லில் அடக்கப்படுகின்ற மூன்று அம்சங்களும் ஏதோவொரு வகையில் கிடைக்கப் பெற்றிருக்கவேண்டும்.
இவ்வற்றில் ஏதாவது ஒன்றோ முளுவதுமாகவோ அல்லது அர்த்தமான வகையில் கொடுக்கப்படாவிட்டால் அவர்களது இறைமை மறுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் எல்லாம் நடந்து வருகின்றது. 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் தொடக்கம் எமது மக்கள் தமது ஜனநாயக தேர்தல்களை பயன்படுத்த இந்த நாட்டில் என்னவகையான தேர்தல் இடம்பெறவேண்டும் என கூறிவருகின்றனர். அதாவது இந்தநாட்டிலுள்ள ஒற்றையாட்சி முறை நாம் சமபிரஜைகளாக வாழமுடியாது. எனவே அது நீக்கப்பட்டு சமஸ்டி முறை உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் அல்லது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசியல் சாசன ரீதியாக ஓழுங்குகள் செய்யப்படவேண்டும்.
அதன் மூலம் தமது இறைமையை பயன்படுத்த விரும்புகின்றோம் என சொல்லிக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தேர்தல்மாகாணசபைத்தேர்தல் உள்ளுராட்சித்தேர்தல் என அதை;துத்தேர்தல்களிலும் தேர்தல்களில் சொல்லியிருக்கின்றார்கள். அது அவர்களது ஜனநாயக உரிமை. அதை மதிக்கவேண்டியது அரசின் உரிமை அதில் தவறுமாயின் அந்த மக்களின் இறைமை மறுக்கப்படுகின்றது. மற்றவர்களுக்குள்ள உரிமை பெரும்பான்மையினருக்குள்ள உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
பெரும்பான்மை இனம் தாம் பெரும்பான்மையாக உள்ளகாரணத்திற்காக சிறுபான்மை இனத்தை ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறு புர்pந்தால் அந்த சிறுபான்மையினருக்கு மாறாக அந்த சிறுபான்மை இனத்தின் இறைமை மறுக்கப்படுகின்றது. இதுவே இங்கு நடந்தது. அதனாலேயே இங்கு போராட்டங்களும் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டன. ஒரு நாட்டில் வௌ;வேறு இனங்கள் மக்கள் வாழ்வதாக இருந்தால் அவ்வகையான மக்களுக்கு இயைவாக இருக்கவேண்டும்.
இந்தியாவில் பலமொழிபேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் உட்பட பல இனம்சார் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு கணிசமானளவு தமது பிரதேசங்களில் அந்தந்த மொழி பேசும் மக்கள் கலாச்சாரம் பாரம்பரியங்கள் கொண்ட மக்கள் தமது பிரதேசங்களை ஆள்கின்றனர். ஆனால் ஆனால் அது முளுமையான சமஸ்டி அல்ல. ஆனால் அதிகாரம் பகிரப்பட்டிருக்கின்றது சட்த்தை ஆக்கும் அதிகாரம் மனிதவுரிமைகள் தொடர்பான அதிகாரம் தமது ஜனநாயக உரிமையூடாக ஆட்சி ஒழுங்குகளை தாங்களே பராமரித்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இதுவே முக்கிய பிரச்சினை
நாம் ஜனநாயக ரீதியாக 30வருடம் போராடினோம் தந்தை செல்வா அவர்கள் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களை செய்து கொண்டார். அவை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாட்டில் யுத்தம் தோன்றியிருக்காது. பண்டா செல்வா ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதன் மூலம் நாம் அரச அதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் நாம் போராட்டம் செய்து ஸ்தம்பிக்கச் செய்தோம்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்ற தந்தை செல்வா தள்ளப்பட்டார் ஏறத்தாள 30வருடம் வேறு வழியில் இந்தப் பிரச்சினையை தீர்க்க போராடினார். 45ம் ஆண்டு பா.உ தேர்தலில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வழவேண்டும் எனக் கேட்டிருந்தார். நாம் 77ம் ஆண்டு பாராளுமன்னத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அண்ணன் அமிர்தலிங்கம் இந்திரா காந்தி கூறிய கருத்தின் அடிப்படையில் அதாவது தனிநாடு கோரினால் நாம் உதவ முடியாது ஆனால் நியாயமான சுயாட்சி முறைக்கு வந்தால் உதவமுடியும் என்றார். அதன் பின்னர் பா.வெளியேயும் உள்ளேயும் தனிநாட்டுக்கு நிகராக நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை நீங்கள் தரத்தயாராக இருந்தால் நாம உங்களுடன் பேச தயார் என் அதற்காக நாம் உழைத்திருக்கின்றோம்.
அவ்விதமான தீர்வொன்று ஏற்படாமையினால்தான் யுத்தம் வெடித்தது காரணம் இல்லாமல் ஒரு யுத்தம் ஆரம்பிக்கவில்லை காரணமில்லாமல் யுத்தம் ஆரம்பிக்கவில்லை அந்தக்காலத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம் இந்திரா காந்தியை சந்தித்தோம். பல முயற்சிகளை எடுத்திருந்தோம் இந்தி.இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தம் ஏற்படுத்தப்பட்டது ஆதை நாம் ஒருபோதும் ஏற்கவில்லை 87ம் ஆண்டு ஜப்பசி மாதம் அமர் சிவசிதம்பரம் நான் கடிதமொன்றை எமது மக்களின் அபிலாசைகளிற்கொரு தீர்வாக ஏடுக்கமுடியாதென தெரிவித்திருந்தோம்.
ஆனால் இன்று யுத்த பின்னர் நாம் போராட்டத்தின் அடுத்த நிலைப்பாட்டிற்கு நாம் சென்றிருக்கின்றோம். யுத்தம் நடந்ததற்று அடிப்படையான காரணம் தமிழர்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டது ஜனநாயக உரிமைகள் மனிதவுரிமைகள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டது. இவற்றின் காரணமாக இன்று இலங் அரசு சர்வதேச ரீதியாக தான் செய்த ஒப்பந்தங்களை தான் கடைப்பிடிக்கவில்லை அந்த ஒப்பந்தங்களை தானே மீறியிருக்கின்றோம். என விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றது
அது சர்வNதுசத்தின் கடமை ஒரு நாடு ஜ.நா ஒப்பந்தங்களை ஏற்று அதை கைச்சாத்திட்டு அதை அமுல்ப்படுத்த சம்மதிக்குமாயின் அவ்வாறு செயற்படவேண்டியது அந்த நாட்டின் கடமை அதிலிருந்து தவறும் பட்சத்தில் அது தொடபாக விசாரிக்க ஜ.நாவிற்கும் சர்வதேசத்திற்கு உரிமையுள்ளது. அதனடிப்படையில்தான் பல கேள்விகள் எழுப்பப்ட்டுள்ளன. இலங்கையில் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதாக சாட்சிகள் இருப்பதாக திடமாக தெரிவிக்கப்படுகின்றது இதனடிப்படையில் தமிழர் உரிமைகள் மீறப்ட்டதாக ஜ.நா நிபுணர்குழு விசாரணையின் பின்னர் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசினாலும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கையில் கூட தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை குறைபாடுள்ளது. முடி மறைக்க நினைக்கின்றார்கள்
ஒரு அரசியல் தீர்வு இந்த நாட்டில் ஏற்படவேண்டும் ஜனநாயக உரிமைகள் மனிதவுர்pமைகள் மதிக்கப்படவேண்டும். நாம் தமிழ் மக்கள் சார்பாக சர்வதேசத்திடம் கேட்பது இந்த நாட்டில் நாம் வாழ்ந்துள்ளோம் மற்றவர்களைப்போல் அவர்களைவிடவும் நீண்டகாலமாக நாம் வாழ்ந்துள்ளோம் நாம் தனித்துவமான மக்கள் எங்களின் சொந்த பாரம்பரியம் கலாச்சாரம் மொழி சரித்திரரீதியாக வாழ்ந்த வடகிழக்கு மண் அனைத்துமேயுள்ளது. எனவே தொடர்ந்து சம உரிமையுடன் வாழ உரிமை உண்டு
உரிமைகளை கேட்டதற்காக பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம். இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டாலு; மீண்டும் இனப்படுகொலை நடைபெறும் வன்முறை நடைபெறும் அதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது அதிலிருந்து எம்மை பாதுகாக்கவேண்டியது உங்கள் கடமை இதையே பகிரங்கமாக சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை அரசு கையாண்ட வழியை உதாரணமாக கொண்டு இன்னுமொரு நாடு இந்த முறையை கையாள்வதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. பேச்சுவார்தை மூலம் நியாயமான ஓழுங்குகள் மூலம் பிரச்சினை தீர்த்திருக்க முடியும் யுத்ததின் மூலம் தீர்க்க நினைத்தது தவறு என்பதை சர்வதேசம் புரியவைக்கவேண்டும் சர்வதேசத்தின் பணிகளுக்கு எமது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் அதன் மூலம் எமது கலாச்சாரம் சமுக ஜனநாய விருப்புக்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
நாம் இலங்கை அரசிற்குச் சொல்லும் விடயம் இந்த உண்மை எல்லாவற்றையும் நோக்கி கடந்த தைமாதம் தொடக்கம் பேசி வருகின்றோம் நாம் நிதானமாகவும் விசுவாசமாகவும் நடந்துள்ளோம் ஒருமித்த நாட்டிற்குள் எமது இறைமையின் அடிப்படையில் நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வொன்றிற்காக பேசிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நீங்கள் நியாயமாக விசுவாசமாக நடக்கவில்லை ஆனால் எமது மக்களுக்கு ஓரு தீர்;வு தேவை அதனால் பேச்சில் ஈடுபட்டோம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது அது எமது தவறல்ல உங்கள் தவறு ஒப்பந்தங்களை மீறும் வகையில் நிறுத்தியிருக்கின்றீர்கள் இதை சர்வதேசம் புரிந்திருக்கின்றது. எமக்கு நியாயமான தீர்வை இல அரசு பேச்சில் ஏற்படுத்தாவிட்டால் இனிமேல் சர்வதேசம் எந்தெந்த வகையில் தீர்க்கமுடியுமோ அந்தந்த வகையில் தீர்த்து வைக்கவேண்டும் அது அவர்களது கடமை.
நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம். மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம்.
Sunday, February 26, 2012
குறுக்கெழுத்து போட்டி - 2
வாங்கிக்

இடமிருந்து வலம்
1) ஒரு வகை நட்சத்திரம்.
3) சரியாக காதில் வாங்கிக்கொள்ளாதவர்களை இப்படி கேலியாக அழைப்பார்கள்
4) மிகை வேறு சொல்
10) தலாய்லாமா
11) மயக்கும் குணம் கொண்ட பெண்
மேலிருந்து கீழ்
1) ஒப்பந்தம் வேறு சொல்
2) நிலைகளில் ஒன்று
6) _____________ திருவள்ளுவர்
7) ஒரு தின்பண்டம்.
9) காக்கி சட்டை
10) ஆண்களும் வைத்துக்கொள்வார்கள் (ஒரு எழுத்து மறைந்து இருக்கிறது)
வலமிருந்து இடம்
6) ஆடி மாசம் என்றால் இவர் தான்
8) கொடியில் காய்க்கும்
12) திறமைசாலி
13) __________ எல்லாம் ரியல் எஸ்டேட்ஆக மாறும் அவலம்
கீழிருந்து மேல்
5) குதிரைக்கும் கொடுப்பார்கள்
8) பெண் பிள்ளை
12) ஏகலைவனும் _____ வித்தையில் கை தேர்ந்தவன்
விடைகளை கண்டறிய இங்கேசொடுக்குங்கள்: பதில்கள்
இடமிருந்து வலம்
1) ஒரு வகை நட்சத்திரம்.
3) சரியாக காதில் வாங்கிக்கொள்ளாதவர்களை இப்படி கேலியாக அழைப்பார்கள்
4) மிகை வேறு சொல்
10) தலாய்லாமா
11) மயக்கும் குணம் கொண்ட பெண்
மேலிருந்து கீழ்
1) ஒப்பந்தம் வேறு சொல்
2) நிலைகளில் ஒன்று
6) _____________ திருவள்ளுவர்
7) ஒரு தின்பண்டம்.
9) காக்கி சட்டை
10) ஆண்களும் வைத்துக்கொள்வார்கள் (ஒரு எழுத்து மறைந்து இருக்கிறது)
வலமிருந்து இடம்
6) ஆடி மாசம் என்றால் இவர் தான்
8) கொடியில் காய்க்கும்
12) திறமைசாலி
13) __________ எல்லாம் ரியல் எஸ்டேட்ஆக மாறும் அவலம்
கீழிருந்து மேல்
5) குதிரைக்கும் கொடுப்பார்கள்
8) பெண் பிள்ளை
12) ஏகலைவனும் _____ வித்தையில் கை தேர்ந்தவன்
விடைகளை கண்டறிய இங்கேசொடுக்குங்கள்: பதில்கள்
Friday, February 24, 2012
தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 4
unacceptable = ஏற்கமுடியாத
unaffected = பாதிப்பில்லாத
unavoidable = தவிர்க்க முடியாத
unbelievable = வியக்கவைக்கும்
unbreakable = உடைக்க முடியாத
unbeaten = தோற்கடிக்கப்பொறாத, தோல்வியடையாமல்
uncertain = தீர்மானிக்கப்படாத, நிச்சயமில்லாத
uncompromising = இணக்கமற்ற
unprotected = பாதுகாக்கப்படாத, பாதுகாப்பளிக்கப்படாத
unlimited = கால வரையறையற்ற
unconscious = நினைவற்ற, உணர்ச்சியற்ற
unequal = சமனற்ற
unbelief = நம்பத்தகாத, நம்பிக்கை இன்மை
unconditional = நிபந்தனையற்ற
undefeated = வெற்றிகொள்ள முடியாத, தோற்கடிக்கப்பொறாத, தோல்வியடையாமல்
unaffected = பாதிப்பில்லாத
unavoidable = தவிர்க்க முடியாத
unbelievable = வியக்கவைக்கும்
unbreakable = உடைக்க முடியாத
unbeaten = தோற்கடிக்கப்பொறாத, தோல்வியடையாமல்
uncertain = தீர்மானிக்கப்படாத, நிச்சயமில்லாத
uncompromising = இணக்கமற்ற
unprotected = பாதுகாக்கப்படாத, பாதுகாப்பளிக்கப்படாத
unlimited = கால வரையறையற்ற
unconscious = நினைவற்ற, உணர்ச்சியற்ற
unequal = சமனற்ற
unbelief = நம்பத்தகாத, நம்பிக்கை இன்மை
unconditional = நிபந்தனையற்ற
undefeated = வெற்றிகொள்ள முடியாத, தோற்கடிக்கப்பொறாத, தோல்வியடையாமல்
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல - unnathaan nanaikkiyila

படம்: பழைய வண்ணாரப்பேட்டை
பாடகர்: வேல்முருகன்
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
தினசரி ராத்திரியில் சில மணி நேரம்
தினசரி ராத்திரியில் சில மணி நேரம்
தூங்கும்போது கனவோடு வந்தாயம்மா
தூங்கும்போது கனவோடு வந்தாயம்மா
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்ன நான் புரிஞ்சுகிட்டேன் என்ன நீயும் புரிஞ்சுகல
உன்ன நான் புரிஞ்சுகிட்டேன் என்ன நீயும் புரிஞ்சுகல
என் மனம் வாடுது.. உன் மனம் வாடல..
என் மனம் வாடுது.. உன் மனம் வாடல..
என் நெஞ்சு உருகுது உன் நெஞ்சம் உருகல..
என் நெஞ்சு உருகுது உன் நெஞ்சம் உருகல..
எப்ப நீ என்ன புரிஞ்சுக போற
என்ன நீ எப்ப கை புடிக்க போற
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உனக்கென்ன புடிச்சதால என் மனச உனக்கு தந்தேன்
உனக்கென்ன புடிச்சதால என் மனச உனக்கு தந்தேன்
மனச மதிக்காம பணத்த மதிச்சுபுட்ட
மனச மதிக்காம பணத்த மட்டும் மதிச்சுபுட்ட
உள்ள அழுவுறேன் நான் வெளிய சிரிக்கிறேன்
உள்ள அழுவுறேன் நான் வெளிய மட்டும் சிரிக்கிறேன்
பணம் மட்டும் வாழ்க்கையில்ல
இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு
அடியே வாழ்க்கையிலே காதல் மோதல் இரண்டும் உண்டு..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
Saturday, February 18, 2012
நீ இல்லை!!!!!!!
இது எனக்கு அனுப்பிய இசைக்கு பதித்த வரிகள்.

நினைவே ஓ நினைவே
எந்தன் நெஞ்சில் அவள் நினைவே
கனவே ஓ கனவே
நித்தம் கனவில் அவள் முகமே
நிழலே ஓ நிழலே
அருகில் இல்லை அவள் நிழலே
மலரே ஓ மலரே
உன்னை சூட இல்லை மனமே
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய்
தணலில் வீழ்ந்த புழுவாய் தவிக்கிறேன்
தண்ணீர் இல்லா மீனாய் துடிக்கிறேன்
பூமாலை சேராமல் தனிமையில் வாடுகிறேன்
சூரியனை கண்ட பனிதுளியாய் மறைகிறேன்
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய் [நினைவே ஓ]
உன்னை மறக்க நினைத்து தோற்றேன்
உலகில் வாழ நான் மறுக்கிறேன்
என் வாழ்க்கையை நாளும் வெறுக்கிறேன்
அதில் சுற்றத்தை முற்றிலும் மறக்கிறேன்
இந்த உலகத்தை நானும் துறக்கிறேன்
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய் [நினைவே ஓ]

நினைவே ஓ நினைவே
எந்தன் நெஞ்சில் அவள் நினைவே
கனவே ஓ கனவே
நித்தம் கனவில் அவள் முகமே
நிழலே ஓ நிழலே
அருகில் இல்லை அவள் நிழலே
மலரே ஓ மலரே
உன்னை சூட இல்லை மனமே
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய்
தணலில் வீழ்ந்த புழுவாய் தவிக்கிறேன்
தண்ணீர் இல்லா மீனாய் துடிக்கிறேன்
பூமாலை சேராமல் தனிமையில் வாடுகிறேன்
சூரியனை கண்ட பனிதுளியாய் மறைகிறேன்
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய் [நினைவே ஓ]
உன்னை மறக்க நினைத்து தோற்றேன்
உலகில் வாழ நான் மறுக்கிறேன்
என் வாழ்க்கையை நாளும் வெறுக்கிறேன்
அதில் சுற்றத்தை முற்றிலும் மறக்கிறேன்
இந்த உலகத்தை நானும் துறக்கிறேன்
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய் [நினைவே ஓ]
Friday, February 17, 2012
சிறந்த கால்பந்து கழகம் - பார்சலோனா
உலகின் தலை சிறந்த கால்பந்து கழகமாக பார்சலோனா அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. லாருஸ் குழுமம் இந்த பட்டத்தை பார்சலோனா கழகத்திற்கு வழங்கியுள்ளது.
Wednesday, February 15, 2012
Wednesday, February 8, 2012
தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 3
hand over = ஒப்படை
vision = நோக்கம், பார்வை, தோற்றம்
mission = குறிக்கோள்
target = இலக்கு
submit = சமார்ப்பித்தல்
responsibility = பொறுப்பு, கடமை
assignment = ஒப்படைப்பு
documentation = ஆவணமாக்கல்
discussion = கலந்துரையாடல், ஆலோசனை
review = திறனாய்வு, மதிப்பீடு, மீள்பார்வை, ஆய்ந்துரை
project = திட்டபணி, செயல்திட்டம்
viva-voice = வாய் மொழியான
vision = நோக்கம், பார்வை, தோற்றம்
mission = குறிக்கோள்
target = இலக்கு
submit = சமார்ப்பித்தல்
responsibility = பொறுப்பு, கடமை
assignment = ஒப்படைப்பு
documentation = ஆவணமாக்கல்
discussion = கலந்துரையாடல், ஆலோசனை
review = திறனாய்வு, மதிப்பீடு, மீள்பார்வை, ஆய்ந்துரை
project = திட்டபணி, செயல்திட்டம்
viva-voice = வாய் மொழியான

சூடு பிடிக்கும் அலைபேசி கதிர்வீச்சு - மின்னஞ்சலில் வந்தது
மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளை ப் படித்து வருகிறோம். அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன. மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் கவனத்துடன் அரசுகள் கையாண்டு வருகின்றன. பாதிக்கக் கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும் போன்களை அங்கு விற்பனை செய்திட முடியாது.

இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால், டில்லி அரசு விழித்துக் கொண்டு, ஒவ்வொரு மொபைல் போன் விற்பனை செய்யப் படுகையிலும், அந்த மொபைல் போனைப் பயன்படுத்துகையில் வெளிப்படும் கதிர் வீச்சு எந்த அளவில் இருக்கிறது என்ற தகவலுடன் கூடிய அட்டையினை இணைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. மக்கள் நலத்துறை, இந்திய மருத்துவ ஆய்வுத்துறை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வல்லுநர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அரசு இந்த விதியினைக் கொண்டு வந்துள்ளது. மேலும், மொபைல் போன் களுக்கான டவர் களை அமைக்கும் விஷயத்திலும் பின்பற்ற வேண்டிய நடை முறைகளையும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால், டில்லி அரசு விழித்துக் கொண்டு, ஒவ்வொரு மொபைல் போன் விற்பனை செய்யப் படுகையிலும், அந்த மொபைல் போனைப் பயன்படுத்துகையில் வெளிப்படும் கதிர் வீச்சு எந்த அளவில் இருக்கிறது என்ற தகவலுடன் கூடிய அட்டையினை இணைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. மக்கள் நலத்துறை, இந்திய மருத்துவ ஆய்வுத்துறை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வல்லுநர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அரசு இந்த விதியினைக் கொண்டு வந்துள்ளது. மேலும், மொபைல் போன் களுக்கான டவர் களை அமைக்கும் விஷயத்திலும் பின்பற்ற வேண்டிய நடை முறைகளையும் அறிவித்துள்ளது.
Saturday, February 4, 2012
தேடும் விழிகள் எனது
இது ஒரு சின்ன பாடல். இந்த பாடல் படத்தில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. அதை மாற்றி இருக்கிறேன்.
படம்: ரட்சகன்
பாடல்: போகும் வழியெல்லாம் காற்று
தேடும் விழிகள் எனது,
என் பாதையில் ஏன் நீ மறைந்தாய்.
ஏந்தும் கரங்கள் எனது,
உன் நிழலும் பிரிந்தது அதனில்.
காலம் கடந்து நானும் ஓடி வந்தேன்,
பிரிவு ஒன்றே எனக்கு ரணமானது!
இதயத்தில் வைத்தேன் உன்னை,
அதில் நினைவுகள் நிழலாய்!!!
இதயத்தில் வைத்தேன் உன்னை
அதில் நினைவுகள் நிழலாய்!!!
படம்: ரட்சகன்
பாடல்: போகும் வழியெல்லாம் காற்று
தேடும் விழிகள் எனது,
என் பாதையில் ஏன் நீ மறைந்தாய்.
ஏந்தும் கரங்கள் எனது,
உன் நிழலும் பிரிந்தது அதனில்.
காலம் கடந்து நானும் ஓடி வந்தேன்,
பிரிவு ஒன்றே எனக்கு ரணமானது!
இதயத்தில் வைத்தேன் உன்னை,
அதில் நினைவுகள் நிழலாய்!!!
இதயத்தில் வைத்தேன் உன்னை
அதில் நினைவுகள் நிழலாய்!!!
Friday, February 3, 2012
தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 2
transport -- போக்குவரத்து
vehicle -- வாகனம்
driving license -- ஓட்டுனர் உரிமம், சாரதி அனுமதிப் பத்திரம்
main road -- பிரதான சாலை
traffic jam -- போக்குவரத்து நெரிசல்
auto -- முச்சில்லூர்தி, மூஉருளி
insurance -- காப்புறுதி
speed breaker -- வேகத்தடை
highway -- நெடுஞ்சாலை
check post -- சோதனை சாவடி
traffic light -- போக்குவரத்து விளக்கு
sign board -- தகவல் பலகை
toll gate -- சுங்கச்சாவடி
workshop -- பணிமனை
bus stop, bus stand, bus terminal -- பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேருந்து முடிவிடம்.
vehicle -- வாகனம்
driving license -- ஓட்டுனர் உரிமம், சாரதி அனுமதிப் பத்திரம்
main road -- பிரதான சாலை
traffic jam -- போக்குவரத்து நெரிசல்
auto -- முச்சில்லூர்தி, மூஉருளி
insurance -- காப்புறுதி
speed breaker -- வேகத்தடை
highway -- நெடுஞ்சாலை
check post -- சோதனை சாவடி
traffic light -- போக்குவரத்து விளக்கு
sign board -- தகவல் பலகை
toll gate -- சுங்கச்சாவடி
workshop -- பணிமனை
bus stop, bus stand, bus terminal -- பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேருந்து முடிவிடம்.
தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 1
file -- கோப்பு, ஆவணம்
diary -- நாட்குறிப்பு, நாள்குறிப்பு
peon -- ஏவலாள், சேவகன்
resignation -- பதவி துறத்தல், பதவி விலகுதல்
attendant -- பராமரிப்பவர், உபசரிப்பவர், ஏவல் புரிவோன்
document -- பதிவேடு
agent -- முகவர்
reception -- வரவேற்பு
margin -- ஓரம்
appointment -- நியமனம், வேலையில் அமர்த்துதல்
சந்திப்புத் திட்டம் (appointment) அழைத்தல்
notes -- குறிப்பு
diary -- நாட்குறிப்பு, நாள்குறிப்பு
peon -- ஏவலாள், சேவகன்
resignation -- பதவி துறத்தல், பதவி விலகுதல்
attendant -- பராமரிப்பவர், உபசரிப்பவர், ஏவல் புரிவோன்
document -- பதிவேடு
agent -- முகவர்
reception -- வரவேற்பு
margin -- ஓரம்
appointment -- நியமனம், வேலையில் அமர்த்துதல்
சந்திப்புத் திட்டம் (appointment) அழைத்தல்
notes -- குறிப்பு
குறுக்கெழுத்து போட்டி - 1
இந்த போட்டி என்னுடைய முதல் முயற்சி. தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும், மற்றும் சுட்டி காண்பிக்கவும். நன்றி.

இடமிருந்து வலம்:-
1) வாதாபி என்று அழைப்பட்ட மன்னன்?
6) நாற்பது திருடர்களை சமாளித்தவர்! கடைசி எழுத்து மறைந்துள்ளது.
3) ஓர் அளவு (கோலிகுண்டு அல்லது பளிங்கு விளையாட்டு)
13) ________ தன் வாயால் கெடும்
வலமிருந்து இடம்:-
2) கேள்வி வேறு சொல்!
8) கர்பிணி பெண்களுக்கு இந்த சத்து முக்கியம்.
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) நமக்கு பகை இது.
11) தண்ணீர் பந்தல் தீர்த்து வைக்கிறது
12) பையில் உள்ள எட்டணாவை பத்துமுறை எண்ணுவான். தேன் நிலவு போனாலும் தனியாக போவான்.
மேலிருந்து கீழ்:-
1) சர்பத்தில் கலக்கும் பொருள் அது?
2) அசாத்திய திறமை உள்ளவரை இப்படி சொல்லலாம்.
5) வாசனை தரும் ஒரு மலர்
7) ஈழத்தில் உள்ள ஒரு நகரம்.
8) cactusஇன் வகை
9) தாக்குவதற்கு பயன்படுத்தலாம்
கீழிருந்து மேல்:-
10) வல்லவனுக்கு இதுவும் ஆயுதமாம். (கீழிர்ந்து மேல்)
12) குறைவு இப்படியும் சொல்லலாம் (கீழிருந்து மேல்)
14) இப்படி தான் தன் மகனை கூறி பெருமையடைகிறார்கள் இந்த காலத்தில்
விடைகள்
இடமிருந்து வலம்:-
1) நரசிம்மவர்மன்.
6) அலிபா
3) ஜான்
13) தவளை
வலமிருந்து இடம்:-
2) வினா
8) நார்
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) புகை
11) தாகம்
12) கஞ்சன்
மேலிருந்து கீழ்:-
1)நன்னாரி
2)வித்தகன்
5)மல்லிகை
7)மன்னார்
8)நாகதாளி
9)கவன்
கீழிருந்து மேல்:-
10)புல்
12)கம்மி
14)சன்

இடமிருந்து வலம்:-
1) வாதாபி என்று அழைப்பட்ட மன்னன்?
6) நாற்பது திருடர்களை சமாளித்தவர்! கடைசி எழுத்து மறைந்துள்ளது.
3) ஓர் அளவு (கோலிகுண்டு அல்லது பளிங்கு விளையாட்டு)
13) ________ தன் வாயால் கெடும்
வலமிருந்து இடம்:-
2) கேள்வி வேறு சொல்!
8) கர்பிணி பெண்களுக்கு இந்த சத்து முக்கியம்.
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) நமக்கு பகை இது.
11) தண்ணீர் பந்தல் தீர்த்து வைக்கிறது
12) பையில் உள்ள எட்டணாவை பத்துமுறை எண்ணுவான். தேன் நிலவு போனாலும் தனியாக போவான்.
மேலிருந்து கீழ்:-
1) சர்பத்தில் கலக்கும் பொருள் அது?
2) அசாத்திய திறமை உள்ளவரை இப்படி சொல்லலாம்.
5) வாசனை தரும் ஒரு மலர்
7) ஈழத்தில் உள்ள ஒரு நகரம்.
8) cactusஇன் வகை
9) தாக்குவதற்கு பயன்படுத்தலாம்
கீழிருந்து மேல்:-
10) வல்லவனுக்கு இதுவும் ஆயுதமாம். (கீழிர்ந்து மேல்)
12) குறைவு இப்படியும் சொல்லலாம் (கீழிருந்து மேல்)
14) இப்படி தான் தன் மகனை கூறி பெருமையடைகிறார்கள் இந்த காலத்தில்
விடைகள்
இடமிருந்து வலம்:-
1) நரசிம்மவர்மன்.
6) அலிபா
3) ஜான்
13) தவளை
வலமிருந்து இடம்:-
2) வினா
8) நார்
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) புகை
11) தாகம்
12) கஞ்சன்
மேலிருந்து கீழ்:-
1)நன்னாரி
2)வித்தகன்
5)மல்லிகை
7)மன்னார்
8)நாகதாளி
9)கவன்
கீழிருந்து மேல்:-
10)புல்
12)கம்மி
14)சன்
Subscribe to:
Posts (Atom)