இன்றைய குறள்

Thursday, May 1, 2014

உழைப்பாளிகள் தினம் - ௨௦௧௪



உடலில் வியர்வை துளிகள்
கரத்தில் இரத்த துளிகள்

காப்பு காய்த்த கரங்கள்
தேய்ந்து போன கால்கள்

உழைப்பிற்கு கூலியா
இல்லை,
குடும்பத்தினரின் பசி தீரவே
கூலி...

பேரம் பேசும் நேரம் கடந்துவிட்டது
பசிக்கும் நேரம் வந்துவிட்டது
உழைப்பிற்கு கொடு என்ற உரிமையை விட்டு
கொடுத்தால் போதும் என்ற மனதின் நிலை,
பசியை அடக்கிக்கொண்டு கையேந்துகிறது

மிடுக்கான தோற்றம் மறைந்து
உழைத்து ஒடிந்து போன தேகத்தோடு
உழைப்பிற்கு ஏற்ற கூலியில்லாமல்
அழுக்கான ஆடைகளோடு
மே தினத்திலும் உழைக்கிறார்கள்
உழைப்பாளிகள்.......

உழைப்பாளிகள் தினவாழ்த்துகள்

5 comments:

  1. உழைப்பின் பெருமை மிக அருமையாக கவிதையில் விளக்கியுள்ளீர்கள் ...

    ReplyDelete
  2. அருமை .... சொல்வதற்கு வார்த்தை இல்லை. உழைப்பாளியின் கஷ்டங்களை..

    ReplyDelete
  3. Happy May day!....
    http://kovaikkavi.wordpress.com/2014/05/01/316-%e0%ae%89%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  4. மிக அருமை கார்த்திக் தம்பி அவர்களே.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete

பழமொழி