இன்றைய குறள்

Friday, June 29, 2012

பேசும் விழிகள்



பேசும் விழிகள் இருக்கும்
பொழுது
வீணாக உதடுகள் எதற்கு
என்று மறைதுக்கொண்டாயோ?!?!

=========================

கவி பாடும் கண்கள்
இருக்க,
படிக்கும் உதடுகள் எதற்கு
என்று மூடிக்கொண்டாயோ!?!?

==========================

பேசும் உதடுகளை விட
அதிகம் மயக்குவது
பேசாத விழிகளே!

அதனால் உதடுகளை மூடாதே
கண்களை மறைத்துக்கொள்!

நிறைய ஆண்களின் புதைகுழியாக அவை மாறும் முன்.

==========================

பௌர்ணமியில் அமாவாசை!!!!!!
உன் கருவிழி......

==========================

ஆயிரம் வார்த்தைகளை
இவை பேசினாலும்
தேடுவது என்னை தானோ என்று
அச்சப்படுகிறேன்,
சிறைபட்டுவிடுவேனோ என்று!!

==========================

உனது கண் எனும்
சிறைச்சாலையின் முள்கம்பிகளாக
இமைகள்!
என்னை அதனுள்ளே என்றும் அடைத்தே வைத்திருக்கிறது!

==========================

8 comments:

பழமொழி