இன்றைய குறள்

Tuesday, June 17, 2025

தாலாட்டு பண் - 2

 நள்ளிரவு நேரத்திலே, நீ 
அமைதியாக தூங்கவேண்டும் ; 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

குட்டி குட்டி கண்ணை உருட்டி , நீ 
இருளில் எதையோ தேடுகிறாய் 
சின்ன கழுத்தை தூக்கியே, நீ 
எதனை நிமிர்ந்து பார்க்கின்றாய் 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

மழலை குரலில் குலவை போட்டு 
உறக்கம் மறந்து என்னை உசுப்புகிறாய் 
இரவு பொழுதினில் குலவை சத்தம் 
என் காதை தைத்து எழுப்பியது 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

ஆராரிரோ பாடி உன்னை 
தூங்க வைக்க முயல்கிறேனே 
குட்டி கை, காலை ஆட்டி, நீ 
தூங்க மறுத்து ஆடம் பிடிக்கிறாய் 
ஆரிராரோ தங்க மகனே 
நீ மெல்ல மெல்ல விழிமூடு 
உறக்கம் உன்னை ஆட்கொள்ளவே  
ஆரிராரோ நானும் பாட 
அரிராரோ ஆரிராரோ 
ஆராரிரோ ஆரிராரோ 
தாலேலோ தாலேலோ 

No comments:

Post a Comment

பழமொழி