இன்றைய குறள்

Friday, May 13, 2016

மாற்றம் வேண்டாமா? சிந்திப்போம்...[படித்தது]



இன்றைய தமிழகத்தின் அவல நிலை.

முடி வெட்டும் கடை மற்றும் சாப்பாட்டு கடைகளிலும் நேபாளி வேலை செய்கிறான்.

வட்டிக்கடையை சேட்டு நடத்துகிறான்.

பட்டுசேலை நெய்வதில் சவுராஸ்ட்ரா இருக்கிறான்.

டீக்கடைகளை மலையாளி வைத்திருக்கிறான்.

நெடுஞ்சாலை வரி வட இந்தியர்களால் வசூலிக்கப்படுகிறது.

துணிக்கடைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் பிழைக்கிறது.

பல்பொருள் அங்காடிகளும் மற்ற மாநிலத்தவரே வைத்திருக்கிறார்கள்.

நமது ஊர் விழாக்களில் கேரளா மேளம் ஒலிக்கிறது.

தமிழக திரைத்துறை மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் தென்னிந்திய திரைப்படச் சங்கம். மற்ற மாநிலத்தவர் யாரும் இதுபோல் பெயர் வைக்கவில்லை.

இவர்கள் எல்லோரும் பிழைப்பது தமிழ்நாட்டில்தான். ஆனால் தமிழனுக்கு மட்டும் வேலையில்லை.

எனக்கு தெரிந்து நாம் விவசாய தொழிலை மட்டும்தான் இன்றுவரை மற்றவர்கள் ஆதிக்கத்தில் விடாமல் செய்து வருகிறோம்.

அதையும் சாய்க்கும் முயற்சிகள்தான் காவிரி, பெரியாறு மற்றும் பாலாறு பிரச்சினை; போதிய மின்சாரம் இன்மை; அளவுக்கு மீறி மணல் எடுத்தல்; இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடுதலை ஊக்குவித்தல்; இரசாயன ஆலைகளை திறத்தல்; சாதி வன்மத்தை தூண்டுதல்; ஏதும் போதுமான அளவிற்கு வெற்றிபெறவில்லை. ஆதலால் கடைசியாக மீத்தேன் திட்டம்.

இதற்கெல்லாம் காரணம் தமிழன் அல்லாதவர்கள் தமிழக கட்சிகளின் தலைமையாக இருப்பதுதான். சிந்தனை செய் மனமே!

இந்த திராவிட ஆட்சியாளர்கள்..

ஐம்பது ஆண்டுகாலம் இந்த மண்ணை ஆண்ட இந்த மாமனிதர்கள்..

இவர்கள் தமிழர்கள் இல்லையென்று முடிவுக்கு வந்ததும்..
தமிழ்மண்ணை தமிழர்களே ஆள வேண்டும் என்ற முடிவும் ஒரே நாளில் எடுத்துவிடவில்லை..

ஆந்திராவை ஆந்திரர்களும்,
கர்நாடாகவை கன்னடர்களும்,
கேரளாவை மளையாளிகளும் இன்னும் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மண்ணின் மைந்தர்களே ஆட்சி செலுத்திகொண்டும்,

அரபு நாடுகளின் அந்த மண்ணின் மைந்தனே அரசனாகவும் அந்நியன் ஒருபிடி மண்ணை கூட விலைக்கு வாங்க முடியாத நிலையிலும்..

இங்கிலாந்து மன்னராக இந்த நொடி வரை  இங்கிலாந்து மண்ணின் மகனே தொடரும் நிலையிலும்..

நாங்கள் எங்கள் மண்ணை இங்கு வாழும் யாரும் ஆளலாம்..
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழின் தொன்தத்துவத்தின்படி வந்தாரையெல்லாம் வாழவைத்ததோடு நிற்காமல் ஆளவும் வைத்தோம்...

பின் எப்போது இவர்கள் தமிழர்கள் இல்லையென்று நாங்கள் முடிவு செய்கிறோம்..? என்றால்..

ஈழத்தில் இனமழிந்த கொண்டிருந்த போது..
"
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன போது..
இனத்திற்காய் குடும்பத்தை இழந்தவரின் புகைப்படம்  பத்திரிக்கையில் வெளியானதற்கு பக்கத்தில் குடும்பத்திற்காக
பதவி கேட்ட படம் வந்தபொழுது..

இசைப்பிரியாவுக்காக இரங்காத மனம்..
கனிமொழிக்காக கதறியபோது..

முகலிவாக்கத்தில் விபத்தில் இறந்த ஆந்திர தொழிலாளர்களை அரவணைத்த கரங்கள்..
ஆந்திர காடுகளில் இருபது தமிழர்கள் சுடப்பட்டதை கண்டு தள்ளிநின்ற போது..

கட்சத்தீவை தாரைவார்த்து.. காவிரியை பறிகொடுத்து..
மீனவனை சுடகொடுத்து..
எல்லாவற்றிற்கும் கடிதம் மட்டுமே எழுதி கொண்டிருந்தபோது..

ஊழல் வழக்கிலிருந்து விடுதலை வாங்கும் அதிகாரம் மிக்கவர்களான இவர்களால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்க முடியவில்லை என்றபோது..

மீத்தேன், கெய்ல் , கூடங்குளம், நியுட்ரினோ, அந்நிய நேரடி முதலீடு என அனைத்தையும் அனுமதித்தபோது..

கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை , அரசுத்துறையில்ஊழல் என அவற்றை தடுக்க தவறியதோடு அவர்களோடு இணைந்து என் மண்ணை சுரண்டி தின்றபோது..

கூட்டணிக்கு பேரம், மந்திரி பதவிக்கு பேரம், ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலையாக பேரம் பேச முடிந்த இவர்களால்  அந்த அதிகார வலிமையின் நூற்றில் ஒரு பங்கு கூட எம்மண்ணின் உரிமையை மீட்க பயன்படுத்தவில்லை எனும்போது..

ஒரு அடி ஆற்றுமணல் வளர நூறு ஆண்டுகள் ஆகிறது.. பக்கத்திலிருக்கும் ஆந்திரா, கர்நாடாக கேரளாவிலிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட தமிழகத்தின் உள்ளே கொண்டுவர முடியாதபோது..

இங்கே இருக்கும் தமிழக ஆற்று மணல்களை அரபுநாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கடத்தப்படும்போது..

இந்த மண்ணைக்காக்க கூட ஏன் இவர்களுக்கு அக்கறை இல்லை என்று சிந்தித்தபோதுதான் இவர்கள் இம்ண்ணை சார்ந்தவர்கள் அல்ல என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் மேலே சொல்லப்பட்டவை.

அரசியல் கட்சிகள்
வழங்கும்
அன்பளிப்பு,
இலவசத்தை தவிர்ப்போம்.

வாக்குக்கு வழங்கும் பணத்தை வாங்க மறுப்போம்.

பணநாயகம் ஒழிப்போம்.
ஜனநாயகம் காப்போம்.

சிந்தித்து செயல்படுவோம்.
சரியான வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

தமிழ்நாட்டில் ஒரு மாற்றம்
காண ஒரு சிறு முயற்சியாவது  செய்வோம்.

இயன்றவரை இந்த பதிப்பை பரப்புங்கள்.

No comments:

Post a Comment

பழமொழி