இன்றைய குறள்

Wednesday, February 25, 2015

கண்களிலே கண்களிலே ஒரு பாடல் வரிகள் [பென்சில் பாடல் வரிகள்]

படம்: பென்சில்
பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல் & ஜாவித் அலி




ஆண்:
கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண்:
எனக்கே தான் தெரியாமல்
எனை சிறுகசிறுக இழந்தேன்

பெண்:
கல்லை குளத்தினில் எறிந்தாய்
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்
ஆண்:
ஓ தள்ளி நடந்திட விரும்பி
நீ மெல்ல அருகினில் வந்தாய்
பெண்:
முதன் முதலாய் முகவரியாய்
உனை நினைத்தேன்
நல்ல முடிவெடுத்தேன்
ஆண்:
மேலாடை தொடுமோ
மூச்யென்னை தொடுமோ
கை விரல் தொடுமோ
கால் நகம் படுமோ
பட்டாடை இல்லாமல்
பூ பொட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ

ஆண்:
ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

ஆண்:
வண்ண உடைகளில் வந்தால்
என் எண்ணம் சிதறுது பெண்ணே
பெண்:
என்னை மறைத்திட்ட போதும்
அதை காட்டி கொடுப்பது கண்ணே
ஆண்:
ஒரு புறம் நீ மறு புறம் நான்
இடையினில் யார்
பெண்:
வெட்கம் தடுப்பதை பார்
ஆண்:
எங்கே நான் சென்றாலும்
என் பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய்
பேசாமல் ஏன் சென்றாய்
கற்காலம் போல் இன்று
சங்கீதச்சொல் ஒன்று
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு

ஆண்:
கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண்:
ஓ எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்

No comments:

Post a Comment

பழமொழி