இன்றைய குறள்

Tuesday, December 23, 2014

குறுந்தொகை கொண்டாடும் பாடல் வரிகள் [இடம் பொருள் ஏவல் பாடல் வரிகள்]

படம்: இடம் பொருள் ஏவல்
பாடல்: குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: வி.வி. பிரசன்னா, சோனியா




பெண்:
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பத்து பால் சொல்லும் இளைய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்
ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்
நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா

ஆண்:
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட்ப்பாலை உன்னோடு யோசிப்பான்

பெண்:
ஓ ஓஓ சரி மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட உண்மை தோணுமே
ஆண்:
இது ஔவையாரின் கேள்வி ஏன் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும் போது அழகாய் வைகிறாய்
பெண்:
இல்லறம் புல்லா வினைத்தொகையும் அளபேடயும் முதல் பாத்து
ஆண்:
சத்தியமடி தமிழ் நமக்கு உணவளிக்கும் தடை ஏது
பெண்:
ஏ பொய்யோ நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான் நாநாநான்

ஆண்:
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட்ப்பாலை உன்னோடு யோசிப்பான்

ஆண்:
ஹே ஹே ஹே உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும் போது நேசம் தோன்றுமே
பெண்:
விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே
ஆண்:
கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா
பெண்:
கற்பனை பண்ணும் மகாகவி கம்பன் மகன் நீ தானா
ஆண்:
அம்மே தமிழில் எம்மே நம்பி வா வா

பெண்:
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பத்து பால் சொல்லும் இளைய வேந்தே
பொருட்ப்பாலை எப்போது காட்டுவாய்

No comments:

Post a Comment

பழமொழி