இன்றைய குறள்

Wednesday, December 17, 2014

சாமை இட்லி செய்முறை


சாமை இட்லி சமைக்க தேவையான பொருட்கள் :

சாமை அரிசி  - 4கிண்ணம்      
முழு உளுந்து - 1.5 கிண்ணம்          
வெந்தயம்     - 1/2 மேசை கரண்டி              
உப்பு          - தேவையான அளவு



செய்முறை:

முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

சாமை அரிசியை நன்றாக அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அரைக்கும் பொழுது நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

வெந்தயம், உளுந்தம்பருப்பு இரண்டையும் நன்றாக அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து வெளியில் 4 மணி நேரம் வைக்கவும். அப்பொழுது தான் மாவோடு தேவையான புளிப்பு சேரும். அப்படி வைக்காமல் குளிர்ப்பதனப்பெட்டியில் நேரடியாக வைத்தால் இட்லி மிருதுவாக இருக்காது. 4 மணி நேரம் வெளியே வைத்த மாவை எடுத்து குளிர்பதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளவும்.

மறுநாள் காலை இட்லி பானையில் இட்லி சுடவும்.
  
சுவையான சாமை இட்லி தயார்.

பின்குறிப்பு: அனைத்து வகையான சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

பழமொழி