இன்றைய குறள்

Friday, August 15, 2014

பெண்ணே பெண்ணே அலைகிறேன் [இரும்பு குதிரை பாடல் வரிகள்]


படம்: இரும்பு குதிரை
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ஜி. வி. பிரகாஷ், பவதாரிணி, யாழினி


ஆண்:
பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ வாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 

ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 

பெண்:
நானும் உன்னை காணும் வரை 
என் வாழ்வில் ஏதோ குறை 
உன்னை கண்ட அந்நாள் முதல் 
அன்றாடம் மூன்றாம் பிறை 
கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க 
நான் கேட்டேனே அன்பின் சிறை 
பார்க்கும்போதே பாவைச்சிலை 
காணாமல் போன கதை 

ஆண்:
என்னை வா என்றாய் நீ 
கேட்டு ஓடோடி பக்கத்தில் வந்தேன் 
கண்கள் பொய் சொன்னதால் 
கானல் நீரைத்தான் நான் பார்த்து நின்றேன் 
சாலை ஓரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் 
நீ வந்தால் நான் தானே புலான்குழல் 

பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி கரைகிறேன் 

காற்றை தூதாக நான்விட 
கண்ணே உன் கூந்தல் கோதி பாறாதோ 
உன் கண்ணின் மை பூசி நீவிட 
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ 
முன்னம் முன்னூறு ஆண்டுகள் 
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 
ஏங்கி நான் பெற்ற என் வரம் 
ஐயோ இப்போது யாரிடம் 
உன்னை பாராது முத்தம் தாராது 
இனி தூங்காது என் கண்களே 

பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி கரைகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ வாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 
 

No comments:

Post a Comment

பழமொழி