இன்றைய குறள்

Monday, July 21, 2014

இருள் வாசிக்கும் இரவு வணக்கம் [கண்களில் உறக்கமில்லை]



கனவில் நீ வரவேண்டும்
என்றே கண்களை மூடுகிறேன்..
உறக்கமில்லை!!

நீ கனவில் வர
தூக்கத்தை வேண்டுகிறேன்
இரவு வணக்கங்களோடு!!!!

================================


இருண்டு போன ஊரில்
இமைகள் மூடவில்லை,
உறக்கம் எனக்கில்லை....
 
ஒளிரும் விளக்குகள்
தெருவில் மட்டுமில்லை,
உன் நினைவுகளாக என்னுள் ஒளிர்கிறது

இருள் சூழ்ந்த அறையினில்
மங்காத ஒளியாக
தெரிகிறது, உன் முகம்
அழியா ஒலியாக
கேட்கிறது, உன் குரல்

தாலுட்டு போல உன் குரல்
என்னுள் கேட்ட,
தென்றாக உன் விரல்கள்
என் தலைகோத,
கனவினில் உன்னை தரிசிக்க
கண்னயருகிறேன்...

கனவில் சந்திப்போம்
நிஜத்தில் இரவு வணக்கம்

3 comments:

  1. இரவு வணக்கம் சொல்லிட்டா கனவில் எப்படி வருவாங்க!?

    ReplyDelete
    Replies
    1. இரவு வணக்கம் சொன்ன பிறகு தானே உறக்கம். பிறகு கனவு..

      Delete

பழமொழி