இன்றைய குறள்

Wednesday, June 25, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - பிரிவு டி (குரூப் டி) இறுதி சுற்று போட்டி

உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு டி உருகுவே vs இத்தாலி, கோஸ்ட்டாரிகா vs இங்கிலாந்து

WorldCup Football 2014 - Group D Uruguay Vs Itay, Costa Rica Vs England

இப்பிரிவில் கடைசி சுற்றுபோட்டி இவைகள். பிரிவில் முதல் இடத்தில் உள்ள கோஸ்ட்டாரிகா அணியும், அடுத்த நிலைக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து அணியும் மோதிய ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது.

உருகுவே அணிக்கு வாழ்வா சாவா என்பது போல உள்ள ஆட்டம் இது, ஆனால் இத்தாலி அணி போட்டியை சமன் செய்ததால் அடுத்த நிலைக்கு முன்னேறிவிடும். உருகுவே வீரர்கள் இலக்கு அடிக்க கடுமையாக போராடினார்கள். அவர்கள் அணியின் நம்பிக்கை நட்ச்சத்திரம் லூயிஸ் சோரஸ் இத்தாலி வீரர் ஜயோர்ஜியோ சில்லினி (Giorgio Chiellini) கடித்துவிட்டார். ஆனால் நடுவர் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் நிச்சயம் அவருக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியே அனுப்பியிருப்பார்.


இத்தாலி அணி மந்தமாக ஆடியது. அவ்வணி வீரர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்த பொழுது அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று ஆடியது போல இல்லை. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் உருகுவே அணி ஒரு இலக்கு அடித்து வெற்றியை உறுதி செய்தது. அதன் பின்னும் இத்தாலி அணியின் ஆட்டம் அத்தனை சிறப்பாக இருந்தது என்று சொல்லமுடியாது. இதன் மூலம் உருகுவே அணி மூன்று புள்ளிகள் பெற்று அடுத்த நிலைக்கு சென்றது.

சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இப்பிரிவில் உள்ள அணிகளின் நிலை கீழ்வருமாறு:-


அடுத்த நிலையில் சி பிரிவில் முதல் இடம் பிடித்த கொலம்பியா அணியும் டி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த உருகுவே அணியும். டி பிரிவில் முதல் இடம் பிடித்த கோஸ்டாரிகா அணியும் சி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த கிரீஸ் அணியும் அடுத்த நிலையில் மோதவிருக்கின்றன.


No comments:

Post a Comment

பழமொழி