இன்றைய குறள்

Thursday, April 17, 2014

கனவே கலையாதே



கலையாதே அழகிய கனவே

நெடு நாள் ஆவல் இது

கிட்டும் இரவிற்கு
ஏங்கியதை விட இரந்தது அதிகம்

காத்திருந்து கிடைத்தற்கு 
மதிப்பு அதிகம் என நானுனர்வேன்

விளையாட்டாக அல்ல
அதீத வாஞ்சையோடு
இருந்த
என் தவிப்பிற்கு 
இயற்கையே சாட்சி

அந்நாள் இந்நாளோ 
என்ற
கற்பனை கோட்டையை 
நெஞ்சில் சுமந்து
கனவில் விளக்கேற்றினேன்....

ஏக்க புள்ளிகளுக்கு
வர்ணம் தீட்டி,
ஓவியமாக்கி,
மகிழ்ந்து காதலிக்கிறேன் 
எனக்கு பிடித்த 
வளர்பிறையை....

கனவே நீ
தேய்பிறையாகாமல்
என் கனவை வளர்த்துவிடு...

துணையோடு ஓவியத்தை
கனவிலாவது ரசிக்கவிடு

ஏக்கத்தில் காத்திருப்பது 
கனவு நிறைவேற 
மட்டுமல்ல........

என்னவரின் வருகைக்காகவும் தான் 

2 comments:

  1. மித்துApril 17, 2014 at 9:00 PM

    அருமையான உணர்வின் வெளிப்பாடு ....நன்றி ..

    ReplyDelete
  2. அருமை.... அருமை...!

    ReplyDelete

பழமொழி