இன்றைய குறள்

Monday, January 6, 2014

கண்ணீர் வாசிக்கும் கவிதை இது


என் பெயரறியாதவன்,

உன் கண்பார்வையால்
வீழ்ந்த பொழுது
அவன் அறிந்தது.
ஆனந்தத்தில்
அவன் மனம் மகிழ்ந்ததோ!!,
நான் எட்டி பார்த்தேன்

அவன் புன்னைகைத்தான்
புதிய அனுபவம்
பிடித்திருந்தது போல!!
மீண்டும் எட்டி பார்த்தேன்.

அகமகிழ்ச்சியை நான் அறிந்தேன்.

விடுதலை பெற்றது
போல எனக்கும்
மகிழ்ச்சியே...

இது உண்மையா
கல் மனது கரைந்ததா?

ஆச்சிரியத்தோடு முகம்
வழுக்கி நான் செல்லும்
பொழுது
அவன் உதட்டு புன்னகையை
பார்த்தேன்

என்ன அழகு!!

அவனுக்கு சிரிக்கவும் தெரியும்
என்று
இன்று நான் கண்டேன்.

விலகி செல்லாதே
என்னை தொலைக்கவைக்காதே
மீண்டும் கல்மனமாகி
நான் மறையும் முன்
அவன் கரம் பற்றிவிடு.

இப்படிக்கு
கண்ணீர்

4 comments:

  1. வணக்கம்

    மிக அருமையான கவி வரிகள் வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

பழமொழி