சென்ற ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டு வீரரான இவர் தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியல் மாட்ரிட் கால்பந்து குழுவில் விளையாடுகிறார்.
இவர் இவ்விருதை லியோனல் மெஸி மற்று பிரான்க் ரிபரி இருவரையும் தோற்கடித்து இந்த விருதை பெற்று சென்றுள்ளார். இந்த விருதை இவர் இரண்டாவது முறை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இவ்விருதை பெற்று அதிக முறை இவ்விருதை பெற்ற வீரர் என்ற சாதனையை புரிந்த லியோனல் மெஸியை தோற்கடித்து இந்த விருதை இவர் பெற்றுள்ளார் என்பது முக்கியம்சம்.
இவ்விருதை பெற்ற இவர் தன்னுடைய விளையாடிய சகவீரர்களுக்கு நந்தி தெரிவித்தார். அவர்கள் இல்லையென்றால் இச்சாதனை சாத்தியமில்லை என்றும் சேர்த்துக்கூறினார். மேலும் தனது மனைவி, மகன் இருவருக்கும் தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் இவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கழகத்தில் விளையாடிய வீரர்களில் அதிவிரைவாக ௨௦௦ (200) இலக்குலகளை அடித்தவர் என்ற சாதனையும் புரிந்துள்ளார். இவ்விருதை ௨௦௦௮ (2008)il இங்கிலாந்தில் உள்ள மான்சிஸ்டர் யுனைட்டட் கழகத்தில் விளையாடும் பொழுது பெற்றார். அதற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து பெறுகிறார்.
வணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..