இன்றைய குறள்

Thursday, December 5, 2013

மழலை



ஒவ்வொரு சிணுங்கலும் ராகமே...
மழலையின் சினுங்கல்கள் மட்டுமே
பெற்றவர்களுக்கு
மிகவும் பிடிக்கும்,
தூக்கத்தை மட்டுமல்ல
எதையும் பிரிய துணிவார்கள்.
பல இசை மீட்டும் குட்டி தேவதைகள்
எத்தனை பாவனைகள்!
அழுகையும் அழகு தான்
சிரிப்பும் அழகு தான்
திகைப்பு அழகு தான்

இறைவன் இருக்கிறான் என்பதை
வெளிக்காட்டுகிறது பிஞ்சு முகம்

எத்தனை ராகங்கள்!
எங்கே கற்றனரோ இந்த இசையை
ராகதேவனே உங்களிடம் யாசிக்க
வேண்டும்
இசையை

8 comments:

  1. நல்லது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அத்தனையும் அழகு
    அனைவருக்கும் விரும்பும்
    பொக்கவாய் சிரிப்பும் ...

    ReplyDelete
  3. வணக்கம்
    அருமையான கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் ரூபன் அவர்களே...

      Delete
  4. அருமை அருமை
    உலகின் ஒப்பற்ற ராகம்
    குழந்தையின் குரலில்தான்
    அதை அறியும் ஞானம்தான் பலருக்கில்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அழகாக கூறினீர்கள் //உலகின் ஒப்பற்ற ராகம்
      குழந்தையின் குரலில்தான்// அருமை.... இரசிக்கிறேன்....நன்றி

      Delete

பழமொழி