இன்றைய குறள்

Thursday, December 5, 2013

நொடிப்பொழுது.................!


நண்பர் ஒருவர் பதித்த படம் ஒரு சிறிய காதல் கவிதையோடு. அதன் தாக்கமே, காதல் மரணம் குறித்த பதிப்பு.....தவறு இருப்பினும் தயவு செய்து சுட்டி காட்டுங்கள்...நன்றி




நீ என்னை
ஏற்கவில்லை என்ற
பொழுதும்,
ஒரு சொட்டு
கண்ணீராவது வடிப்பாய்
என்ற
நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன்,




எனது மரணப்படுக்கையில்.........!

======================================

என் மரணம்,
உனக்கு
அன்பு பற்றி
தெரிந்துகொள்ள
வாய்ப்பு
என்றால்
எத்தனை முறை
வேண்டுமானாலும்
இறப்பேன் நான்.......

======================================

துன்பங்களை மறக்க
செய்யும்
மரணம், இன்பம்
என்றாலும்,
உன்னை பிரியவருமே!
ஆதலால்
எனக்கு மரணத்தை
பிடிக்கவில்லை.....

======================================

அடுத்த பிறவியிலும்
நீ
நீயாக பிறப்பாய்
என்றால்,
நான்
மீண்டும் பிறப்பேன்

உன்னை காதலிக்க....!

======================================

உன் காலடி
ஓசை
கேட்டால்,
மரணத்தையும் வென்று
வருவேன் என்ற
நம்பிக்கை இருக்கிறது,



மரணப்படுக்கையில் நான்.....

======================================

வாழ்விலும் நரகத்தை
காண்கிறேன்
நீயில்லாமல்!
உன் ஒற்றை சொல்லால்
நான் நானாக இல்லை!
உன் மரணப்படுக்கையில்,
கொடுத்த
வாக்கை காப்பாற்ற வேண்டி,
என்னை
மாய்த்துக்கொள்ளாமல்,



நித்தமும் சாகிறேன்.............!!!!

======================================

நீயில்லாமல் அனைத்தும்
அழகாக தெரிகிறது,
மரணம் உட்பட!!
தழுவுகிறேன் மகிழ்ச்சியோடு
மரணத்தை!
உன்னை நோக்கி பயணத்தை
தொடர்கிறேன்,


சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு.....!!!

======================================

4 comments:

பழமொழி