இன்றைய குறள்

Wednesday, December 4, 2013

பிம்பம் கண்டேன்!!!


உன்னை பற்றி எழுத நினைத்தேன்
காதிதங்களும் கசப்பட்டன,
வெகுண்டேன்!

பேனா மை கூட
தீர்ந்து போனது,
கலங்கினேன்!

செய்வதறியாது வெறித்து
நின்றேன்,
என்னையே உறுக்கினேன்!

என் குருதியில் நனைந்தன
காகிதங்கள்,
மெழுகு போல நான் உருக
அவ்வெளிச்சத்தில் உன் உருவம்
அழகாக ஒளிர,
நான் கண்களை மூடினேன்
உன் உருவத்தை படம்பிடித்தபடியே!

நான் சுவாசிக்க தடுமாற,
அறையெங்கும் வழிந்தோடும் குருதி
சகதி போல்
என் மேனி எங்கும்
ஒட்டிக்கொண்டு,
உன் வாசத்தை எனக்களித்து
என் உயிரை பறித்தது!!!

1 comment:

பழமொழி