இன்றைய குறள்

Wednesday, December 4, 2013

தனிமையிலே என் இதயம் துடிக்குதே [பாடல் வரிகள்]

படம்: இவன் வேற மாதிரி
இசை: சத்தியா. சி
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்த்தக்க்ஷன், நிவாஸ்


தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே
என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை

தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே
என் நிழலும் நடக்குதே


வானிலவு ஏளனமாய்
எனைப்பாத்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறு எதுவும் புரியாமல்
வேர் வரையில் உன் கனவே
என்னவளே
என் உலகம் உரையுதே
கண்களிலே
உன் கனவாய் நிறையுதே

பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழுகடல் ஏழுமலை
தாண்டி உனை தேடிடுவேன்
காற்றிலெல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என் உயிரே
என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன்
நீ பிரிந்தால் நொடியிலே

No comments:

Post a Comment

பழமொழி