இன்றைய குறள்

Wednesday, December 25, 2013

பொங்கல் சிறப்பு கட்டுரை -- இன்றைய திரைப்படத்தின் போக்கும் சமூக பாதிப்புகளும்


இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்


தமிழ் ஆர்வலர்களின் இந்த தலைப்பை முதலில் செல்லமாக கண்டித்துவிட்டு இந்த கட்டுரையை துவக்குகிறேன். சினிமா என்பதற்கு பதிலாக திரைப்படம் என்றிருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. தமிழ்மொழி திரைப்படங்களால் சீரழகிறது என்பதன் வெளிப்பாட்டிற்கு இதுவே ஓர் உதாரணம்.

முன்னுரை:-
திரைப்படம் ஒரு சிறப்பான ஊடகம். கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஆன்மிகம், அரசியல் போன்றவற்றை அழகாகவும், நேர்த்தியாகவும், சிறப்பாகவும், எளிமையாகவும் மக்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அரசியல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பல திரைப்படங்கள் உள்ளன. தென்னிந்தியாவிற்கு ஐந்து முதல்வர்களை கொண்டுவந்தது திரைப்படத்துறை. இப்படி சிறப்பான இந்த திரைப்படத்தின் இன்றைய நிலை? அது மக்களுக்கு கற்றுத்தருவதுஎன்ன? கலை தமிழர்களுள் பின்னி பிணைந்த ஒன்று என்று தெரிந்திருந்தும் அதன் மூலம் நடப்பது என்ன? சில வேதனைகள், பல கோபங்கள், கேவலமான அவலங்கள், கண்ணீர்த் துயரங்கள் அனைத்துமே அடங்கும்.

பொருளுரை:-
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், என்று சொல்லிக்கொண்டு வந்த வந்தேரிகள் வளர, தமிழன் தேய்ந்து போனது திரைப்படத்தால் தான். தமிழகத்தை மலையாளி, தெலுங்கன், கன்னடன் ஆட்சி செய்து அழித்தது போதாதென்று மராட்டியன் ஒருவன் வேண்டுமென்று தமிழகத்தில் இன்னமும் சிலர் வேண்டிக்கொண்டிருக்கின்றார்கள். நல்லவனாக, வல்லவனாக நடித்துவிட்டு, அதற்கும் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு அரியணை ஆசையில் கனவுகாண்கிறார்கள். அவனின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள என்னென்ன ஆசை வார்த்தைகள், மாய பேச்சுக்கள். தமிழன் தன் வேலையை, குடும்பத்தை தவிக்கவிட்டு நடிகனுக்காக களமிறங்கி போராடுகிறான். தன் இனமக்கள் மாண்டு சாயும் பொழுது ஒன்றுமே செய்யாதவர்கள், ஒரு நடிகனின் திரைப்படம் வெளியாக தாமதித்த பொழுது தன்னைத்தானே இழந்தான். அந்த அளவுக்கு தமிழனின் அறிவை மழுங்கடித்துள்ளது திரைப்படம்.

மூன்றாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை மண்ணை ஏதோ கொலைக்களம் போல சித்தரித்து, துரோகம், கொலை, கொள்ளை மட்டுமே நடந்தேறுவது போல காண்பித்தது மக்கள் மனதில் மதுரை என்றால் ஒரு கேவலமான, வன்முறை மிகுந்த ஊராக பதிய வைத்த பெருமை தமிழ் திரைப்படத்தையே சாரும்.

நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களின் பெருமையை பறை சாற்றிய திரைப்படங்கள் வெளியாகி பல தசாப்தங்கள் ஆகிறது. இஸ்லாமியர்களை வாக்குகளுக்கு பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் பல இருக்கிறது. ஆனால் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தேசத்துரோகிகள் போன்று சித்தரித்து நிறைய படங்கள் வெளிவந்துள்ளது. தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமியர்கள் மட்டும் தான் என்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருக்கின்றன. சாமானிய மக்கள் இஸ்லாமியர்களை ஏதோ தீவிரவாதிகள் போன்று பார்க்கும் கண்ணோட்டம் வந்ததிற்கான காரணம் இன்றைய திரைப்படத்திற்கு உண்டு என்பது மறுக்கப்படாத உண்மை. ஒன்றொன்றாய் , தாயாய் பிள்ளையாய் பழகிய இஸ்லாமியர்களுடன் சிறு விரிசல் உண்டாவதற்கு காரணம் தமிழ் திரைப்படங்கள் என்று சொன்னால் மிகையாகாது.

எங்கே போனது நமது பாரம்பரியத்தை விளக்கும் படங்கள். ஒரு வரலாறும் இல்லாத அமெரிக்கர்கள் ஏதோ நாகரீகத்தை அவர்கள் தான் கொண்டு வந்தது போல சித்தரித்து திரைப்படங்களை உருவாக்குகின்றார்கள். ஆனால் பல வரலாறுகளை கொண்ட நாம் என்னத்தை கண்டோம்!? ஒன்றுமே இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. வேலுநாச்சியார், மருதுபாண்டி போன்ற வீரர்களின் சாதனைகளை திரைப்படமாக மாற்ற மறந்தது திரைப்படத்துறை. எத்தனையோ இலக்கியங்களை கிடப்பில் போட்டுவிட்டது மிகப்பெரிய கலைத்துறையான திரைப்படத்துறை. திரைப்படத்துறையால் நம் பாரம்பரிய கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால்குதிரை மற்றும் தெருக்கூத்து போன்றவை தமிழகத்தில் இருந்த சுவடே இல்லாமல் அழிந்துபோனது. மிக அண்மையில் வந்த ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மனை பற்றி காட்சிகள் அமைந்தது. ஆனால் வேற்று மொழிகளில் அப்படம் மொழிபெயர்க்கப்படும் பொழுது தமிழ் மன்னர் என்று சொல்லாமல் அந்தந்த மாநிலத்தில் பிறந்தவராக காண்பித்து நம் மனங்களை உடைத்துவிட்டார்கள். போதிதர்மணனை தெலுங்கு இணைத்தவர் என்று அவர்கள் ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்கள். என்ன கொடுமை இது!

http://www.youtube.com/watch?v=hoXfTktlljo

வேற்று மாநில இயக்குநர் ஒருவர், தன் படத்தில் காநாயகனுக்கு எதிர்வேடம் தரித்தவர் மற்றவர் காதால் கேட்கமுடியாத வார்த்தைகளை பேசவைப்பார். என்ன இப்படியெல்லாம் வசனம் வருகிறது என்று வினவினால் எதார்த்தம் என்பார். எதார்த்தத்தை அனர்த்தமாய் பார்க்கும் இளசுகளை வெகுவே பாதிக்கிறது. அந்த இயக்குனரின் இயக்கத்தில், கதாநாயகர்கள் தங்கள் நண்பர்களுக்குள் பேசும் பொழுது ஆங்கிலம் மிகுதியாகவே இருக்கும். இங்கு நம்மொழியை நசுக்குகிறார். மேலும் அவர் இயக்கும் திருமண காட்சிகளிள் பெரும்பாலான திருமணங்கள் தமிழ்முறைப்படி நடக்காது. இப்பொழுது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மலையாள முறைப்படி தான் தமிழகத்தில் திருமணம் நடக்கிறது என்று நினைத்து அதே முறைப்படி தங்களின் திருமணங்களை நடத்திக்கொள்கின்றார்கள். இங்கு கலாச்சாரம் மங்கி வருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தின் நடவெடிக்கைகளை திரைப்படத்தின் ஊடாக பார்க்கின்றார்கள். அப்படிப்பட்ட திரைப்படத்துறையில் நம் கலாச்சாரத்தை காண்பிக்க மறந்தது ஏன் என்று தான் தெரியவில்லை.

மேலும், சென்னையில் பேசக்கூடிய வட்டார மொழியை ஏதோ சமூக விரோதிகளின் மொழியாக காண்பித்து அவமானப்படுத்துகின்றார்கள்.

பெண்ணை தெய்வமாக மதித்து போற்றுகிற தமிழ் மண்ணில் பெண்களை ஏமாற்று பேர்வழிகள், குறிப்பாக பெண்கள் தான் ஆண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்று காண்பித்து படம் பார்க்கும் சின்ன பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கின்றார்கள். ஏழே வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் என்னிடம் பெண்கள் தான் ஏமாற்றுபவர்கள், ஆண்கள் ஏமாளிகள் என்று சொன்ன பொழுது சில தமிழ் திரைப்படங்களின தாக்கம் எனக்கு புரிந்தது.

வயதானவர்களை மிகவும் நேசித்த, மதித்த தமிழர்கள் இன்று அவர்களை அல்லல் படுத்த காரணமும் தமிழ் திரைப்படங்களே. இளசுகள், பெருசுகளை நையாண்டி, எகத்தாளம், ஏளனம், செய்வது போன்ற காட்சிகள் அப்படியே சிறியவர்கள் மனதில் பதிந்து அதை போலவே தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றார்கள்.இன்றைய பச்சை மட்டைகள் நாளைய பழுத்த மட்டைகளே என்பதை உணரவைக்கவுமில்லை . இது பெரியவர்களின் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. இன்றைய திரைப்படங்களில் பெற்றோர்கள் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்குவது போன்ற காட்சிகள் காண்பதே அரிதாகிவிட்டது. கலையின் மூலம் நல்ல சங்கதிகளை, செய்திகளை, புரட்சியை பரப்பிய காலம் சென்று, இன்று மிக அவலமான திரைப்படங்கள் தான் வெளியாகிறது. சிறியவர்கள் பெரியவர்களை வாடா போடா என்ற நகைச்சுவை வசனங்களால், எத்தனை சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களை அப்படி அழைக்கின்றார்கள். ஒரே பிள்ளையை பெற்று வைத்துக்கொண்டு அதை கண்டிக்கமுடியாமல் இன்றைய பெற்றோர்களும் அல்லல்ப் படுகின்றார்கள் என்பது மெய்யே.
அருமையான காவியங்களும், பெருமையான இதிகாசங்களும், அழகான கதைகளும், திருப்பங்கள் உள்ள நெடுங்கதைகளும், நெறிப்படுத்தும் ஆன்மீகமும் கொண்ட தமிழ் மண்ணில் கதைகளுக்கா பஞ்சம்? இதை எல்லாம் விட்டுவிட்டு எப்பொழுதும் மதுபான கடைகளையே சுற்றி சுற்றி களம் அமைக்கின்றார்கள்! காரணம் புலப்படவில்லை.

இன்று பெரும்பாலான திரைப்படங்களில் மது அருந்துவதை காண்பிக்கின்றார்கள். மது பருகுதல் பஞ்சமகா பாவங்களில் பெரிய பாவம் என்ற கோட்ப்பாட்டையே மறக்க வைத்தன திரைப்படங்கள். குடிப்பது தமிழகத்தில் சாதாரணம் என்பது போல காண்பித்து தமிழக இளைய சமுதாயத்தை ஒரு குடிகார வர்க்கமாக மாற்றியது தமிழ் திரைப்படம் தான். நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால், பிறந்தநாள், திருமணம், தேர்வில் தேர்ச்சியடைந்தாலும், தேர்ச்சி பெற தவறினாலும், குழந்தை பிறந்தாலும், ஏதேனும் மரணம் நேர்ந்தாலும் என்று மது நம்முடன் அனைத்து சுபதுக்கங்களிள் இருப்பது போன்ற மாயையை காண்பித்து இன்று மது விற்பனையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்ததில் திரைப்படங்களின் பங்கு நிறையவே இருக்கிறது.
சமூக விரோதிகள் மீது பெண்கள் காதல் கொள்வது போன்ற படங்கள் சமூகத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்கின என்றும் சொல்லலாம். நடைமுறை வாழ்வில் நிறைய இளசுகள் வழிதவறி போனது, வயது கோளாறில் ஏதாவது குடும்பப்பெண்ணைப் பார்த்து காதல் கொள்வது, காதலிக்காத பெண்களை மிரட்டுவது, துன்புறுத்துவது, முகத்தில் திராவகம் வீசுவது இன்னும் ஒரு படி மேலே சென்று கொடூரமாக கொலை செய்வதும் அரங்கேறியிருக்கின்றன. அதற்கு உதாரணங்கள் நித்தமும் செய்திகளில் நித்தமும் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.

பள்ளிகளில் நடக்கும் தேர்வினை எதிர்கொள்ள முடியாத சிறுவர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கடத்தல் நாடகங்களும் அரங்கேற்றியிருக்கின்றார்கள். இதற்கும் நிச்சயம் தமிழ் திரைப்படத்தின் பங்கு இருக்கிறது.

ஒரு படம், காதலியை மணக்கும் காதலன் தன் வீட்டிற்கும், காதலி அவள் வீட்டிற்கும் செல்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்றது. அதில் பெண் தன்னுடைய தாலியை மறைத்து, தன் பெற்றோருடனே வாழ்வது போல அமைந்த காட்சியின் பாதிப்பால், பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் கொண்ட சில பெண்கள் மறைத்த தாலியும் கழுத்துமாக தமிழகத்தில் (குறிப்பாக சென்னையில்) இருந்தார்கள். தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் மணமுடித்து வீட்டிலே தாலியை மறைத்து வாழ தைரியம் கொடுத்தது அந்த ஒரு திரைப்படம் மிக முக்கிய காரணத்தை வகிக்கிறது.

வெளிநாட்டில் கிரேக்க கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இலியட், ஒடிசி போன்ற இலக்கியங்கள் திரைப்படங்களாக வெளியாகியுள்ளது. முன்னொரு காலத்தில் பார்த்திபன் கனவு, ராஜராஜ சோழன்,சிவகாமியின் சபதம் , வீர பாண்டிய கட்டபொம்மன், போன்ற வரலாற்று கதைகள் வந்தது. அதில் நம்முடைய கலாச்சாரம், வீரம், பண்பாடு அனைத்தும் விளக்கப்பட்டு இருக்கும். அதை அழகாவும், நேர்த்தியாகவும் பதித்திருப்பார்கள். ஆனால் நம்முடைய வீரத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் எத்தனை படங்கள் இப்பொழுது வெளியாகிறது என்றால் பதில் சுழியம் தான். இன்றைய தமிழ் திரைப்படங்கள் தமிழ் குடும்ப அமைப்பை சீரழிக்கும் விதமாக தான் எடுக்கப்படுகிறது என்பது தான் கசப்பான உண்மை.

முடிவுரை:-
தமிழ்த்திரைப்பட துறையில் வேற்று மாநில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இன்று நம் தமிழகத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றார்கள். அவர்களுக்கெப்படி நம் கலாச்சாரம் பற்றி தெரியும். மேலும் அரசியலை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் வருவது குறைந்து விட்டது, காரணம் தமிழ் திரைப்படங்களை தயாரிப்பவர்களோ அல்லது விற்பனை செய்பவர்கள் அரசியல்வாதிகள் ஆகிவிட்டார்கள். காணும் காட்சிகளே உண்மையென நம்பும் நம் இளஞ்சர்களும் ,நடிகனின் சொல்லே வேதவாக்கு என்பவரும் இருக்கும்வரையிலும் மாறுதல் தேடும் நம் எண்ணங்கள் வியர்த்தம் தான் .சீரழிக்கும் காரணிகளான திரைப்படங்கள் இருக்கும்வரை சீர்குலைக்கும் எண்ணம் உடையோரும் "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் " என்ற ரீதியிலேயே நடந்துகொள்வார். மொத்தத்தில் இன்றைய தமிழ் திரைப்படங்கள் இளைய சமுதாயத்தை முற்றிலும் சீரழிக்கிறது என்றே நிறைவுசெய்கிறேன். திரைப்படங்கள் கலை என்பதை மீறி வியாபாரம் என்று மாறிய பிறகு நாம் நினைப்பது எதுவும் அரங்கேறாது என்பதே உண்மை. நன்றி.

15 comments:

  1. தமிழனை தமிழன் ஆள வேண்டும் ...

    திரையரங்குகள். தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களும் தமிழனாய் இருக்க வேண்டும்....அப்போது தான் விடியும்

    ReplyDelete
  2. விஜெய் தொலைக்காட்சியில் பாடகர்களுக்கான போட்டி

    அதுல போட்டியாளர்களிலும் சரி ...நடுவர்களிலும் சிரி ...மலையாளிகள் அதிக்கம் இருக்கு

    இது தமிழ் தொலைக்காட்சி தானே

    ReplyDelete
  3. வணக்கம்
    சிறப்பாக உள்ளது. இந்த கட்டுரை வாழ்த்துக்கள் பதிவாக வலம் வந்துள்ளது அதற்கான லிங் அனுப்பவில்லை. பாருங்கள்.லிங் வந்த பின் மீண்டும் ஒருமுறை பார்கிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தோழர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டேன்...

      Delete
  4. வணக்கம்

    அப்படி என்றால் சரிதான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே. போட்டியில் பங்குகொள்ள அழைத்தமைக்கு நன்றி.

      Delete
  6. கட்டுரை கண்டேன். நண்பர் ரூபன், பாண்டியன் வழியே தகவலும், திண்டுக்கல் தனபாலன் வழி வலைப்பக்க இணைப்பும் கிடைத்தது.பதிவுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. பொங்கள் சிறப்பு கட்டுரையாக இணைய உலகில் தங்கள் கட்டுரை உலா வருவதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. தொடருங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரர். பகிர்ந்து படிக்கத் தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழமையே. என்னுடைய ஆதங்கத்தை தான் பதித்து இருக்கேன்.

      Delete
  8. வணக்கம்

    தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கட்டுரைப்போட்டியில் தங்களின் கட்டுரை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வணக்கம்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு-
    நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தோழரே...நான் வேலை நிமித்தத்தால் நேரமில்லாமல் இருக்கேன்..நான் எங்கே இருந்து வந்து மற்ற கட்டுரைகளுக்கு பின்னூட்டம் இடுவது.... :( :( :(

      Delete

பழமொழி