இன்றைய குறள்

Tuesday, December 24, 2013

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு [பாடல் வரிகள்]

படம்: ஜில்லா
பாடல்: கண்டாங்கி கண்டாங்கி கட்டி 
பாடலாசிரியர்: கவிபேரரசு வைரமுத்து 
பாடகர்கள்: விஜய், ஷ்ரேயா கோஷல்
இசை: டி. இமான் 



ஆண்:
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்ணாலே கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாரை கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சி லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொத்த எழுதி தாரேண்டி
முத்தம் தரியா ஓ ஓ ஓ

பெண்:
ஓ கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாரை கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது  
இந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தீராது
தள்ளி நில்லையா

ஆண்:
அடி உன் வீடு தல்லாக்குளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலைக்கோவில் யானைவந்து  
ஹல்வாவை தின்பது போல்
என் ஆசை உன்னை தின்னட்டுமே

ஆண்:
ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்தப்பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நெத்திக்குள்ள துடிக்குது

பெண்:
வெள்ளை முழி வெளியே தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈரக்குலை நடுங்குது

ஆண்:
சின்ன சின்ன பொய்யும் பேசற
சில்லுன்னு தான் சூடும் எத்துர

பெண்:
நீ பார்த்தாக்கா தென்னமட்டை
பான்ஜாச்சா தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

ஆண்:
நீ தேயாத நாட்டுக்கட்டை
தெரியாம மாட்டிகிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

பெண்:
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாரை கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

ஆண்:
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற

பெண்:
அன்புவிட்டு ஆள அடிக்கிற
தும்பவிட்டு வால பிடிக்குற

ஆண்:
தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

பெண்:
எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

ஆண்:
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாரை கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

பெண்:
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது  
இந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தீராது
தள்ளி நில்லையா

பெண்:
கண்டாங்கி கண்டாங்கி 
ஆண்:
ம் ம்கும் ம் ம்
கண்டாரை கிருக்கேத்தும்
ஆண்:
கஞ்சா வச்ச கண்ணு

2 comments:

பழமொழி