இன்றைய குறள்

Wednesday, December 11, 2013

நண்பர்களுக்கு காதல் வந்தால்







அழைப்புகள் வருவதுமில்லை
அழைக்கும் போதும் புறக்கணிக்கப்படுகிறது

காதல் மலரும் புதிதில்
நட்பு தனி பாதையில்
பயணிக்க நிர்பந்த்தமாகிறது......

நிர்பந்தத்தை ஏற்றுக்கொள்ள
மனபக்குவப்படவேண்டுமா
அல்லது
விலகலை பின்பற்றலாமா
என்ற குழப்பமும் மனதில் நிழல் போல
தொடர்கிறது.....!

விலகினால் பழகியது
பொய்த்துவிடுமோ என்ற அச்சமும்
தனி பாதையில் சென்றால்
நட்பு பிரியுமோ என்ற ஐயமும்
பற்றிக்கொள்கிறது.....!

ஆடவருடனான நட்பின் நிலையே
தான் பெண்களிடதே உருவான நட்பும்.
பேதமில்லை இங்கு!

ஒன்றாக பயணிக்க எண்ணம்
இருந்த போதும்
பிரிந்துள்ளோம் என்ற உணர்வால்
நாமே விலகுதல் சரியா?
விலக்கப்படும் பொழுது பிரிதல்
நன்றா?
என்ற கேள்வியும் எழுகிறது!

குழபதிற்கிடையில் அலைபாயும்
நட்பு

6 comments:

  1. என்ன ஐயா, என்ன நடக்கிறது இங்கே ?
    தங்களுடைய சொந்த குலப்பமோ ? :)

    ReplyDelete
  2. விரைவில் சரியாகி விடட்டும்...

    ReplyDelete

பழமொழி