படம்: விழா
இசை: ஜேம்ஸ் வசந்தன்
தமிழ் மனம் வீசும் கிராமிய பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் கேட்பது மிக அரிதாகி இருக்கும் இக்காலத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த பாடலை விழா என்ற படத்தில் இசையமைத்துள்ளார். இதோ பாடல் வரிகள்
என்னாச்சோ ஏதாச்சோ மூச்சிபேச்சி நின்னு போச்சோ
சொப்பனத்தில் மதிமயங்கி கண்ணுவாய் ஒட்டி போச்சோ
கண்ணாடி கல்லுபட்டா கண்ணு பல நூறு ஆகும்
மவராசா கண்ணுபட்டா மனசு இலவபஞ்சாகும்
கடலு கொதிச்சிதுன்னா விளாவ நீரேது
கண்ணீரு கொதிச்சிதுன்னா கண்ணு முழி தூங்காது
கட்டெறும்பு தோலுருச்சி வக்கீலுக்கு கோட்செஞ்ச சூத்திரரே
சித்தெரும்பு பல்லேடுத்து சிங்கத்தை வேட்டை ஆண்ட தந்திரரே
கையும் காலும் ஓடலையே கண்ணு முழி ஆடலையே
கையும் காலும் ஓடலையே கண்ணு முழி ஆடலையே
No comments:
Post a Comment