இன்றைய குறள்

Saturday, November 9, 2013

நெஞ்சடைச்சு நின்னேனே ஒன்னும் புரியாம [பாடல் வரிகள்]


படம்: விழா
இசை: ஜேம்ஸ் வசந்தன்



நெஞ்சை வருடும் ஒப்பாரி பாடல். கிராமிய குத்து இசையோடு அருமையான பாடல் வரிகள்.



நெஞ்சடைச்சு நின்னேனே ஒன்னும் புரியாம
என்ன பண்ண போறேனோ பாதை தெரியாம
ஒத்த நம்பிக்கையும் உசிற விட்டு போயிடுச்சே
கடைசிவரை கண்ணீரே துனையின்னு ஆயிடுச்சே

ஊரோடு சாவுகேல்லாம் முன்னாடி நீ போவ
உன்னோட சாவால பரிதவிச்சி போனேனே
வேண்டிகிட்ட சாமியெல்லாம் வேடிக்கை பாக்குதுன்னு
நீயே சாமியாக வானத்துக்கு போயிட்டியோ

கிளையோடு வாழ்ந்த வீட பூவுக்கு விருப்பமையா
காத்துக்கு அது தெரியாம உதிரியா ஆக்குதையா

நெத்தியில வந்திருக்க
புத்தியில நின்னிருக்க
மத்தியில என் மனச
கத்தியில நறுக்குதையா
என்ன சொல்லி அழுதாலும் உன் நினைப்பு மாறல
உன்னவிட்டா யார் இருக்கா ஆதிரிக்க பூமியில

2 comments:

  1. நெஞ்சை உலுக்கும் அற்புதமான
    ஒப்பாரிப்பாடல்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

பழமொழி