இன்றைய குறள்

Saturday, November 9, 2013

என்ன மாயம் நீ செய்தாய் [பாடல் வரிகள்]


படம்: காதல் சொல்ல ஆசை
பாடலாசிரியர்: தமிழ் சீனு





என்ன மாயம் நீ செய்தாய்
எனை பெண் என உணரவைத்தாய்
என்ன மாயம் நீ செய்தாய்
என் எண்ணத்தை சிதறவைத்தாய்

நெஞ்சுக்குள் ஆயிரம் சிறகுகள் முளைத்தது
பறக்கமுடியவில்லையே,
வெட்கத்தில் என் முகம் முதல்முறை சிவந்தது
மறைக்கமுடியவில்லையே,
என்னை மறந்தேன்,
உன்னுள் தொலைந்தேன்,
ஏன் இந்த மாற்றம் சொல்....

என்ன மாயம் நீ செய்தாய்
எனை பெண் என உணரவைத்தாய்
என்ன மாயம் நீ செய்தாய்
என் எண்ணத்தை சிதறவைத்தாய்

இதழ்கள் பேசாத வார்த்தை என் மௌனம்
இன்று பேசுதே
வானம் தொடாத தூரம் என் ஆசை
தொட தூண்டுதே
நிலவே நிலவே நீ தேய்ந்து போய்விடு
இமையே இமையே நீ தேடி ஒய்ந்துவிடு
மேகம் முழங்க மின்னல் மழையில்
காதல் வானவில் கண்டேன்

என்ன மாயம் நீ செய்தாய்
எனை பெண் என உணரவைத்தாய்
என்ன மாயம் நீ செய்தாய்
என் எண்ணத்தை சிதறவைத்தாய்

உயிரை என்னோடு விழுந்து என் உணர்வை
கொண்டு சென்றதேன்
தமிழை என் நெஞ்சில் பதித்து நீ கவிதை
கொண்டு வென்றதேன்
அன்பே அன்பே இது என்ன புது மயக்கம்
ஏனோ ஏனோ மனம் கேட்கும் ஒரு விளக்கம்
என்னுள் சிரித்தேன் உன்னை ரசித்தேன்
என்னை உன்னிடம் தந்தேன்

No comments:

Post a Comment

பழமொழி