இன்றைய குறள்

Thursday, November 7, 2013

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே [பாடல் வரிகள்]

படம்: என்றென்றும் புன்னகை
பாடல்: என்னை சாய்த்தாளே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரியா கோஷல்





ஆண்:
என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

ஆண்:
நேற்று போலே வானம் அட இன்றும் கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
பெண்:
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
ஆண்:
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பெண்:
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

ஆண்:
என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

ஆண்:
மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
பெண்:
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
ஆண்:
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
பெண்:
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

ஆண்:
என்னை சாய்த்தாளே
ரரரரர
இனி வாழ்வேனோ இனிதாக
பெண்:
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

ஆண்:
இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
பெண்:
ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாய்
ஆண்:
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்



No comments:

Post a Comment

பழமொழி