இன்றைய குறள்

Monday, March 25, 2013

காதல் வரும் வரை காத்திருந்தேன் [பாடல் வரிகள்]


படம்: சுண்டாட்டம்
பாடல்: காதல் வரும் வரை காத்திருந்தேன்
பாடியவர்: சைந்தவி
இசை: பிரிட்டோ, எஸ், என், அருணகிரி
பாடலாசிரியர்: பழனிபாரதி





காதல் வரும் வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈர காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிறம் மாறுதே
உயிர் உன் பெயரை சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னை கொல்கின்றதே

காதல் வரும் வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈர காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்


நான் மட்டும் தனியாக நிலவுக்கு துணையாக
தூங்காமல் உனை பார்க்கிறேன்
அழகான இளம் தேகம் மரம் மீது விழுதாக
அதை காக்கும் விரல் கேட்கிறேன்
பூ தூக்கம் இழந்த பறவை
என்னை காண துடிக்கும்
உன் கையில் சேரும் வரையில்
ஜீவன் துடித்திடுமே


இரவுக்கும் பகலுக்கும் இடைவேளை இல்லாமல்
உனக்காக நான் ஏங்கினேன்
நீ என்னை தொடும் போதும் தவிக்கின்றேன் வெகு நேரம்
எதற்கிந்த உடல் வாங்கினேன்
நான் தூங்கும் போதும் கனவில்
உன்னை பார்க்கும் விழிகள்
நீ எங்கு என்றும் அருகில்
தேடும் என் கைகளே


காதல் வரும் வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈர காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிறம் மாறுதே
உயிர் உன் பெயரை சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னை கொல்கின்றதே

No comments:

Post a Comment

பழமொழி