இன்றைய குறள்

Saturday, October 13, 2012

இயற்கை போட்டி




மங்கும் மாலை பொழுது
புற்களின் பச்சை வண்ணமும்
மாலையின் மஞ்சள் வண்ணமும்
வர்ண போட்டியில்
வெற்றிபெற கடுமையாக
மோதிக்கொள்ளும் காட்சி.

மரங்களும் தங்கள் பங்கிற்காக
நிழலை
பூமியில் தெளித்து
கறுப்பு கொடி காட்டுகிறது
இயற்கைக்குள் போட்டி வேண்டாம்
என்பது போல்.

மனிதனுக்கு மட்டும் இது
ஒரு அழகான
மனநிம்மதியான
ரம்மியமான
குளிர்ச்சியான
வண்ணமிகு ஓவியமாக
தோன்றுகிறது.

இயற்கை என்றுமே நமக்கு
அழகாக தோன்றும்.
ஆனால் நாம் மட்டும் அதற்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்

2 comments:

பழமொழி