
அனைத்து சொந்தங்களையும்
சொத்துக்களையும் பறிகொடுத்து,
இருக்கும் உயிரை மட்டும்
காப்போம் என்று எண்ணி,
உயிரை பணயம் வைத்து
தனக்கு தானே துணையாகி,
உடுத்திருக்கும் ஆடையுடன் மட்டும்
தஞ்சம் தேடி வேறு நாட்டில்
நுழைய முயலும் பொழுது,
சொந்த நாட்டிலேயே கையேந்தி பிழைத்துகொள்ளலாம்
என்ற எண்ணம்,
ஒரு கனம், அவர் நெஞ்சம் ஓரம் எட்டி பார்க்க,
உடலில் ரணத்தொடு, இதயத்தில் கணத்தோடு,
கண்ணீரை மட்டுமே விழியில் தாங்கி
அடியெடுத்து வைக்கிறார் மறுவாழ்வு தேடி.
நாம் கொடுக்கவேண்டியது
நம் அன்பை மட்டுமே.
குறிப்பாக நம் தமிழ்சொந்தங்கங்களாக இருந்தால்!?!?!?!?
No comments:
Post a Comment