இன்றைய குறள்

Friday, August 12, 2011

வெற்றி உன் கையில்.

சிகரம்
கண்களுக்கு தூரம்
தான் அருகில் செல்லும்வரை.

பாதை
கரடுமுரடு தான்
அடியெடுத்து வைக்கும் வரை.

தடை
ஒரு இடர் தான்
கையால் தகர்க்கும் வரை.

நம்பிக்கை
ஒன்று போதும்,
பாதைகளை மலர்களாக்கி,
தடைகளை தகர்த்தெறிந்து,
சிகரத்தில் வெற்றி கொடிநாட்ட.

நொடிந்துவிட்டால்
சிறு கல்லும் மலை தான்.
எழுந்துவிட்டால்
நெடு மலையும் மடு தான்.

No comments:

Post a Comment

பழமொழி