போதிய பயிற்சி இல்லாமலும், மலை ஏற்ற பயணம் கடந்த 1.5 ஆண்டுகளாக மேற்கொள்ளாமலும், இந்த பயணம் மேற்கொண்டது என்னுடைய தவறு தான். ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப முடிந்த பயணம் இது. திறமையை விட பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பார்கள். பயிற்சி இல்லாமல் சென்ற இப்பயணம் தோல்வி என்று சொல்லவிடாமுடியாது. இருந்தாலும் பொறுத்தவரை, இது தோல்வி பயணம்.
999கிமீ தூரத்தை கொடுத்த கால 75 அவகாசமான மணி நேரத்தில் கடக்கவேண்டும். பாதை எங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.எந்தெந்த வழியாக செல்லவேண்டும் என்றும் சொல்லப்பட்டுவிட்டது. அவகாசத்தோடு கொடுக்கக்ப்படும் எல்லா பயணத்திற்கும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுவிடும். கொடுத்த வழியில் நாம் செல்கிறோமா என்ற சோதனையும் நடக்கும். ஆங்காங்கே பயணம் நடத்துபர்வர்கள் இருப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சுயபுகைப்படம் (செல்பி) எடுத்து பகிரியில் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு சோதைசாவடியையும் குறிப்பிட்ட நேரத்தில் கடக்கவேண்டும்.
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் சென்ற பயணத்தின் முதல் நாள்.
23-ஜனவரி-2025 காலை 6 மணிக்கு ecrஇல் உள்ள, headwind என்ற மிதிவண்டி கடையில் இருந்து துவங்கியது. இந்த ஆண்டு வெறும் 9 பேர் மட்டுமே பங்குகொண்டோம். மிதிவண்டி துவங்கி 3கிமீ சென்று கொண்டிருந்த பொழுது யோகேஷ் என்ற தம்பி என்னோடு இணைந்து பயணித்தார். அவர் என்னை திருப்பதி-444கிமீ பயணத்தின் பொழுது சந்தித்ததாக கூறினார். எனக்கு அவ்வளவாக சிந்தையில் இல்லை. சரி ஒன்றாக செல்லலாம் என்று கூறி பயணத்தை தொடர்ந்தோம். கிழக்கு கடற்கரை சாலையிலேயே பயணித்து, வெங்கம்பாக்கம் சென்றடைந்தோம். அங்கே ஒரு செல்பி எடுத்த்துக்கொண்டு திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டு செல்லவேண்டும்.
வழியில் நெம்மேலி என்ற இடத்தில் சிற்றுண்டியை முடித்தோம். பிறகு அங்கிருந்து செங்கல்பட்டு சென்று ஜி.எஸ்.டி சாலையில் பயணிக்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட 85கிமீ முடிந்திருந்த பொழுது எனக்கு நீர்ச்சுருக்கு (நீர்க்கடுப்பு/ urinary infection) ஏற்பட்டுவிட்டது. என்னால் ஓட்ட இயவில்லை. 5கிமீ கடக்க மிகுந்த சிரமப்பட்டுவிட்டேன். இளநீர், எலும்பிச்சை சாறு, நீர் 3 லிட்டருக்கு மேல் குடித்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது. கொஞ்சம் சிரமப்பட்டு தான் பயணத்தை தொடர்ந்தேன்.ஆங்காங்கே 2ரூ நிஜாம் பாக்கு வாங்கி மென்றுக்கொண்டே திண்டிவனம் கடந்துவிட்டோம். கூட்டேரிப்பட்டு அருகில் உள்ள கடையில் மத்திய உணவு முடித்துக்கொண்டு பயணம் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றது. வழியெங்கும் நிஜாம் பாக்கு தான் உதவியது.ஆங்காங்ககே 5/10 என்ற கணக்கில் வாங்கி மென்றுக்கொண்டே செஞ்சுருச்சு சுங்கச்சாவடியை அடைந்தோம். நேரம் மாலை 16:30.
அங்கிருந்து திருச்சி பாதையில் சென்று, சேலம் பாதைக்கு மிதிவண்டியை திருப்பினோம். தண்ணீர் அதிக அளவில் குடித்துவிட்டேன். மேலும் பயண ஏற்பாட்டார்களிடம் நடந்ததை கூறிவிட்டேன். அவர்கள் ஏதாவது பார்த்து வாங்கி வருகிறோம் என்று கூறினார்கள். பிறகு அங்கிருந்து இளவரசனூர் கோட்டை செண்ட்ராய்ந்தோம். அப்பொழுது யோகேஷ் இளைப்பார வேண்டும் என்று கூறினார். சரி உறங்குங்கள் என்று கூறி 1லி நீர் பெறுகிறேன். அப்பொழுது என்னுடைய சகா மிதிவண்டி ஓட்டுநர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) மிதிவண்டி ஓட்டுநர் சித்த மருத்துவர் திருபார்த்திபன் அவர்களுக்கு அழைப்புகொடுத்து அறிவுரை கேட்டேன். அவர் ஒரு மணி நேரம் ஓய்வு எடுங்கள் சரியாகிவிடும். நீங்கள் என்னென்ன குடித்தாலும் மிதிவண்டி ஒட்டிக்கொன்டே இருந்தால் இது சரியாகாது, ஓய்வு தான் தீர்வு என்று கூறினார். நானும் ஒரு மேனன் எரம் ஓய்வு எடுத்தேன். மேலும் கதிரவன் மேற்கில் மறைந்துவிடும் இருந்தான். அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் குளிர் வந்தது. பிறகென்ன, சிறுநீர் இதமாக வர ஆரம்பித்துவிட்டது. இங்கிருந்து முடியும் வரை 8கிமீக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தவண்ணம் பயணித்தேன். ஒரு வழியாக சேலம் traveller inn சென்றடைந்தோம். நேரம் காலை 3.ஓரிடத்தில் எனக்கு பசியினால் மயக்கம் ஏற்படுவது போல தோன்றியது. இனிப்பு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டேன். அப்பொழுது தான் பயண ஏற்பாட்டாளர் ஹரி, Traveller's Innஇல், எனக்கு ஒரு syrup கொடுத்தது நினைவில் வந்தது. சரி அதை குடித்தால் மயக்கம் தெளியும் என்று குடித்துவிட்டேன். நான் அமர்ந்திருந்த பொழுது சகா ஓட்டுநர் செந்தில் என்னிடம் இரண்டு மிட்டாய் கொடுத்தார். அதை மரமரவென்று மென்று விழுங்கினேன். 2 நிமிடங்களில் அப்பாடா என்று இருந்தது. நான் சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு பயணத்தை துவக்கினேன். 2கிமீ கடந்திருப்பேன், தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. கூடாது என்று பயணத்தை துவக்கினேன். அப்பொழுது சரவணன், சேலம் மிதிவண்டி வீரர் ஒருவரோடு இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்து சுண்டல் பயறுகளை கொடுத்தார். அதை வாங்கி சாப்பிட்டவுடன் ஒரு தெம்பு வந்தது. மேலும் ஒன்றை கையில் கொடுத்து சென்றார்.
இன்னமும் மலை ஏற்றம் இருக்கிறது. அசதி ஆழ்த்தியது. முன்னேற இயலவில்லை. பயணத்தை நிறுத்திவிடலாம் என்று தோன்றியது. நேராக மிதிவண்டியை மலையில் இருந்து இறக்கி சேலம் தொடர்வண்டி நிலையம் சென்று சென்னைக்கு எடுத்து வந்துவிடலாம் என்று தோன்றியது. இதுவரை எந்த மிதிவண்டி பயணத்திலும் தோன்றாத எண்ணம் இப்பயணத்தில் தோன்றியது. பரவாயில்லை நேரம் கடந்தாலும் நாம் பயணத்தை முடிப்போம் என்று தொடர்ந்தேன். ஒரு 5:30 மனை நேரம் போராட்டத்திற்கு பிறகு 20கிமீ மலையை ஏற்றிவிட்டேன். அங்கு மிக சுவையான சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அதன் பிறகு சேர்வராயன் கோவிலுக்கு மலை ஏற துவங்கினேன். இரண்டு மலை ஏற்றத்திற்கு பிறகு, என்னுடைய முன் சக்கரம் தூங்கியதால், இறங்கிவிட்டேன். பிறகு என்ன தள்ளிக்கொண்டே சேர்வராயன் கோவில் வரை சென்றேன்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 999கிமீ முடித்தது என்க்கு மிக்க மகிழ்ச்சி.