இன்றைய குறள்

Friday, February 7, 2025

999 கிமீ பயணம்


போதிய பயிற்சி இல்லாமலும், மலை ஏற்ற பயணம் கடந்த 1.5 ஆண்டுகளாக மேற்கொள்ளாமலும், இந்த பயணம் மேற்கொண்டது என்னுடைய தவறு தான். ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப முடிந்த பயணம் இது. திறமையை விட பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பார்கள். பயிற்சி இல்லாமல் சென்ற இப்பயணம் தோல்வி என்று சொல்லவிடாமுடியாது. இருந்தாலும்  பொறுத்தவரை, இது தோல்வி பயணம். 

999கிமீ தூரத்தை கொடுத்த கால 75 அவகாசமான மணி நேரத்தில் கடக்கவேண்டும். பாதை எங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.எந்தெந்த வழியாக செல்லவேண்டும் என்றும் சொல்லப்பட்டுவிட்டது. அவகாசத்தோடு கொடுக்கக்ப்படும் எல்லா பயணத்திற்கும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுவிடும். கொடுத்த வழியில் நாம் செல்கிறோமா என்ற சோதனையும் நடக்கும். ஆங்காங்கே பயணம் நடத்துபர்வர்கள் இருப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சுயபுகைப்படம் (செல்பி) எடுத்து பகிரியில் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு சோதைசாவடியையும் குறிப்பிட்ட நேரத்தில் கடக்கவேண்டும். 

கிட்டத்தட்ட நான்கு நாட்கள் சென்ற பயணத்தின் முதல் நாள்.

23-ஜனவரி-2025 காலை 6 மணிக்கு ecrஇல் உள்ள, headwind என்ற மிதிவண்டி கடையில் இருந்து  துவங்கியது. இந்த ஆண்டு வெறும் 9 பேர் மட்டுமே பங்குகொண்டோம். மிதிவண்டி துவங்கி 3கிமீ சென்று கொண்டிருந்த பொழுது யோகேஷ் என்ற தம்பி என்னோடு இணைந்து பயணித்தார். அவர் என்னை திருப்பதி-444கிமீ பயணத்தின் பொழுது சந்தித்ததாக கூறினார். எனக்கு அவ்வளவாக சிந்தையில் இல்லை. சரி ஒன்றாக செல்லலாம் என்று கூறி பயணத்தை தொடர்ந்தோம். கிழக்கு கடற்கரை சாலையிலேயே பயணித்து, வெங்கம்பாக்கம் சென்றடைந்தோம். அங்கே ஒரு செல்பி எடுத்த்துக்கொண்டு திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டு செல்லவேண்டும். 


வழியில் நெம்மேலி என்ற இடத்தில் சிற்றுண்டியை முடித்தோம். பிறகு அங்கிருந்து செங்கல்பட்டு சென்று ஜி.எஸ்.டி சாலையில் பயணிக்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட 85கிமீ முடிந்திருந்த பொழுது எனக்கு நீர்ச்சுருக்கு (நீர்க்கடுப்பு/ urinary infection) ஏற்பட்டுவிட்டது. என்னால் ஓட்ட இயவில்லை. 5கிமீ கடக்க மிகுந்த சிரமப்பட்டுவிட்டேன். இளநீர், எலும்பிச்சை சாறு, நீர் 3 லிட்டருக்கு மேல் குடித்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது. கொஞ்சம் சிரமப்பட்டு தான் பயணத்தை தொடர்ந்தேன்.ஆங்காங்கே 2ரூ நிஜாம் பாக்கு வாங்கி மென்றுக்கொண்டே திண்டிவனம் கடந்துவிட்டோம். கூட்டேரிப்பட்டு அருகில் உள்ள கடையில் மத்திய உணவு முடித்துக்கொண்டு பயணம் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றது. வழியெங்கும் நிஜாம் பாக்கு தான் உதவியது.ஆங்காங்ககே 5/10 என்ற கணக்கில் வாங்கி மென்றுக்கொண்டே செஞ்சுருச்சு சுங்கச்சாவடியை அடைந்தோம். நேரம் மாலை 16:30.

 அங்கிருந்து திருச்சி பாதையில் சென்று, சேலம் பாதைக்கு மிதிவண்டியை திருப்பினோம். தண்ணீர் அதிக அளவில் குடித்துவிட்டேன். மேலும் பயண ஏற்பாட்டார்களிடம் நடந்ததை கூறிவிட்டேன். அவர்கள் ஏதாவது பார்த்து வாங்கி வருகிறோம் என்று கூறினார்கள். பிறகு அங்கிருந்து இளவரசனூர் கோட்டை செண்ட்ராய்ந்தோம். அப்பொழுது யோகேஷ் இளைப்பார வேண்டும் என்று கூறினார். சரி உறங்குங்கள் என்று கூறி 1லி நீர் பெறுகிறேன். அப்பொழுது என்னுடைய சகா மிதிவண்டி ஓட்டுநர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) மிதிவண்டி ஓட்டுநர் சித்த மருத்துவர் திருபார்த்திபன் அவர்களுக்கு அழைப்புகொடுத்து அறிவுரை கேட்டேன். அவர் ஒரு மணி நேரம் ஓய்வு எடுங்கள் சரியாகிவிடும். நீங்கள் என்னென்ன குடித்தாலும் மிதிவண்டி ஒட்டிக்கொன்டே இருந்தால் இது சரியாகாது, ஓய்வு தான் தீர்வு என்று கூறினார். நானும் ஒரு மேனன் எரம் ஓய்வு எடுத்தேன். மேலும் கதிரவன் மேற்கில் மறைந்துவிடும் இருந்தான். அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் குளிர் வந்தது. பிறகென்ன, சிறுநீர் இதமாக வர ஆரம்பித்துவிட்டது. இங்கிருந்து முடியும் வரை 8கிமீக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தவண்ணம் பயணித்தேன். ஒரு வழியாக சேலம் traveller inn சென்றடைந்தோம். நேரம் காலை 3. 

சற்று நேரம் இளைப்பாறி, குளித்து, புது உடுப்புகள் மாற்றிக்கொண்டு, அனைத்து மின் உபகரணங்களும் மின்னினைப்பு கொடுத்துவிட்டு, பயணத்தை 5:30மணி அளவில் துவக்கினோம். ஏற்காடு மலை ஏற்ற பயணம், பழைய வேகம் இல்லை. போதிய பயிற்சி இல்லாததால், என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். நெறைய ஓய்வு. வழக்கம் போல மலையின் அழகை ரசித்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது. ஆங்காங்கே ஓய்வு எடுத்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது.


ஓரிடத்தில் எனக்கு பசியினால் மயக்கம் ஏற்படுவது போல தோன்றியது. இனிப்பு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டேன். அப்பொழுது தான் பயண ஏற்பாட்டாளர் ஹரி, Traveller's Innஇல், எனக்கு ஒரு syrup கொடுத்தது நினைவில் வந்தது. சரி அதை குடித்தால் மயக்கம் தெளியும் என்று குடித்துவிட்டேன். நான் அமர்ந்திருந்த பொழுது சகா ஓட்டுநர் செந்தில் என்னிடம் இரண்டு மிட்டாய் கொடுத்தார். அதை மரமரவென்று மென்று விழுங்கினேன். 2 நிமிடங்களில் அப்பாடா என்று இருந்தது. நான் சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு பயணத்தை துவக்கினேன். 2கிமீ கடந்திருப்பேன், தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. கூடாது என்று பயணத்தை துவக்கினேன். அப்பொழுது சரவணன், சேலம் மிதிவண்டி வீரர் ஒருவரோடு இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்து சுண்டல் பயறுகளை கொடுத்தார். அதை வாங்கி சாப்பிட்டவுடன் ஒரு தெம்பு வந்தது. மேலும் ஒன்றை கையில் கொடுத்து சென்றார்.




இன்னமும் மலை ஏற்றம் இருக்கிறது. அசதி ஆழ்த்தியது. முன்னேற இயலவில்லை. பயணத்தை நிறுத்திவிடலாம் என்று தோன்றியது. நேராக மிதிவண்டியை மலையில் இருந்து இறக்கி சேலம் தொடர்வண்டி நிலையம் சென்று சென்னைக்கு எடுத்து வந்துவிடலாம் என்று தோன்றியது. இதுவரை எந்த மிதிவண்டி பயணத்திலும் தோன்றாத எண்ணம் இப்பயணத்தில் தோன்றியது. பரவாயில்லை நேரம் கடந்தாலும் நாம் பயணத்தை முடிப்போம் என்று தொடர்ந்தேன். ஒரு 5:30 மனை நேரம் போராட்டத்திற்கு பிறகு 20கிமீ மலையை ஏற்றிவிட்டேன். அங்கு மிக சுவையான சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அதன் பிறகு சேர்வராயன் கோவிலுக்கு மலை ஏற துவங்கினேன். இரண்டு மலை ஏற்றத்திற்கு பிறகு, என்னுடைய முன் சக்கரம் தூங்கியதால், இறங்கிவிட்டேன். பிறகு என்ன தள்ளிக்கொண்டே சேர்வராயன் கோவில் வரை சென்றேன்.



அங்கிருந்து இறங்கி, மத்திய உணவு முடித்து மேட்டூர் நோக்கி பயணித்தோம். மேட்டூர் அணை (16 பாலம் சென்று) சென்று செல்பி எடுத்துக்கொண்டோம்.



அங்கே எங்களுக்கு பொறித்த சூடான மரவள்ளி கிழங்கு சீவல்கள்  மற்றும் பகோடா வழங்கப்பட்டது. அங்கிருந்து பயணம் கிராமத்து பாதைகளில் பயணம். மெல்ல மெல்ல இருள் சூரியனை விழுங்கிக்கொண்டிருந்த தருணம். தெரு நாய்கள் எங்களை தொரத்தாமல் இல்லை. அனைத்து ஊர்களிலும் உள்ள நாய்கள் துறத்ததின. சில உக்கிரமாக 200மீட்டர் வரை துரத்தின. நாங்கள் மிதிவண்டியை வேகமாக மிதிக்கவும் காரணமாயிற்று. ஒரு பக்கம் வயல்கள், மறுபக்கம் மலை தொடர் என்று மிக மிக அழகாக இருந்தது. ஆனால் முழு அழகையும் அக கண்ணகளால் மட்டுமே காண முடிந்தது. புற கண்களை இருள் மறைத்தது. அங்கிருந்து கண்னாம்பூச்சி, குருவரெட்டியூர் வழியாக அந்தியூர் வந்தடைந்தோம். அங்கு இரவு உணவு முடித்துக்கொண்டு, கோபி சென்றடைந்தோம். ரிலையன்ஸ் எரிபொருள் நிலையத்தில் எங்களுக்கு ஒரு அறை ஒதுக்கி, கமலா ஆரஞ்சி, குடி நீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் வைத்திருந்தனர். அங்கிருந்து எங்கள் மிதிவண்டி, பவானி சென்று சேலம் வழியாக வாழப்பாடி சென்றோம். 
அங்கு 2 மணி நேரம் தூக்கத்திற்கு பிறகு, மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டோம். அங்கிருந்து தியாகதுரத்திற்கு முன், ஒரு கடையில் பிரட் ஆம்லெட் மற்றும் மேகி சாப்பிட்டோம் 
இருவரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வந்தடைந்தோம். அப்போழுது யோகேஷ் அவர்கள் மணி மாலை 7:30 ஆகிறது, மாலை 9 மணிக்கெல்லாம் 20-25கிமீ செல்ல இயலுமா என்று கேட்டார். சரி வாங்க முயற்சி செய்வோம் என்று கிட்டத்தட்ட 36கிமீ ஒட்டினோம். விழுப்புரம் புறவழிச்சாலை முடிந்தது. அங்கே இரவு உணவு எடுத்துக்கொண்டு, அங்கிருந்து முண்டியம்பாக்கம் வழியாக திண்டிவனம்  செல்லும் பொழுது யோகேஷுக்கு உறக்கம் வந்துவிட்டது, என்னுடைய மின்னணு கருவிகளில் மின்சார சேமிப்பு மிக குறைவாக இருந்ததால், நான் முதலில் திண்டிவனம் அம்மா உணவகத்திற்கு வந்தடைந்து அனைத்து உபகரணங்களும் மின்னிணைப்பு கொடுத்தேன். பிறகு அங்கிருந்து மருவத்தூர் வழியாக மதுராந்தகம் வந்து ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, மிதிவண்டியை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் பாலத்திற்கு வந்து, கி.க.சாவில் உள்ள headwind மிதிவண்டி நிலையமாக துவக்க இடத்திற்கு வந்தடைந்தோம். 




தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 999கிமீ முடித்தது என்க்கு மிக்க மகிழ்ச்சி.






Thursday, January 2, 2025

மிதிவண்டி பயணம் 1-சனவரி-2025

 பாதஎரிச்சல் காரணமாக 10-மார்ச்-2024 அன்று நிறுத்தப்பட்ட மிதிவண்டி பயணத்தை 2025இல் துவங்கலாம் என்ற சிந்தனை கடந்த ஒன்றரை மாதங்களாக மனதில் இருந்தது. அலுவலகத்தில் நிறைய பேர் எதோ நோயாளியை  விசாரிப்பது போல மிதிவண்டி ஓட்டுவதில்லையா? உடல்எடை கூடியது போல இருக்கிறதே? என்னவாயிற்று? ஏதாயிற்று? என்று தொடர்ந்து பேசியதால் எனக்கு ஏதோ பித்து பிடித்தது போல இருந்தேன். சரி 1-சனவரி-2025 இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம் என்று நினைத்தேன். எப்படியாவது ஒரு 50கிமீ தூரம் மிதிவண்டியில் பயணித்துவிடுவோம் என்ற எண்ணம் மேலோங்கியது. 

என்னுடைய அலுவலகத்தில் என்னை போலவே தூரப்பயணம் மேற்கொள்ளும் நண்பர், ஐயா நாம் இருவரும் ஓட்டலாமா என்று கேட்டார். சரி அவரோடு இதை பற்றி பேசும் பொழுது, நானும் வருகிறேன், என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று மேலும் ஒருவர் இணைந்துகொண்டார். என்னிடம் கடந்த சில ஆண்டுகளாக மிதிவண்டி பயணங்களை பற்றி ஆர்வமாக கேட்ட நபர்களை எல்லாம் ஒரே குழுவாக அலுவலக அரட்டை செயலியில் இணைத்து, எத்தனை பேர் சனவரி-1 மிதிவண்டி ஓட்ட தயாராக இருக்கிறார்கள் என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினேன். வெறும் 4 நபர்கள் தான் தயாராக இருந்தார்கள். எத்தனை பேர் இருந்தால் என்ன, நாம் ஓட்ட முடிவெடுத்துவிட்டோம், ஒட்டிவிடுவோம் என்று நான் முடிவெடுத்துவிட்டேன்.

டிசம்பர்31 அன்று என் அணியில் பணிபுரியும் நபர்கள் 3 பேர், எங்களிடம் மிதிவண்டி இல்லை, ஆனால் நாங்களும் பங்குபெற விரும்புகிறோம் என்று கூறினார். சரி, வாருங்கள் என்று அவர்களை பெருங்குடியில்  probikers என்ற பெயரில் இயங்கும் மிதிவண்டி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைக்கு அழைத்து சென்று வாடகைக்கு 3 மிதிவண்டிகள் வாங்கிக்கொடுத்தேன். பிறகு அனைவரையும் நாளை சந்திக்கிறேன் என்று வீட்டிற்கு வந்துவிட்டேன். என்னுடைய மிதிவண்டியை துடைத்துவிட்டு, முன் மற்றும் பின் விளக்குகளை பொருத்திவிட்டு, காலை பயணத்திற்கு தயாரானேன்.

சனவரி-1 காலை 4 மணிக்கு எழும்பி, குளித்துவிட்டேன். மிதிவண்டியை எடுத்தேன், காலை 6 மணிக்கு தான் துரைப்பாக்கத்தில் இருக்க வேண்டும். போதிய நேரம் இருந்ததால், தாம்பரம், பல்லாவரம் வழியாக மீனம்பாக்கம் தாண்டி, அதிகாரிகள் பயிற்சி பயிலகம் அருகே திரும்பி வேளச்சேரி வழியாக துரைப்பாக்கம் சென்றேன். எனக்கு முன் அங்கு பார்த்தசாரதி, கீர்த்தனா, அரவிந்தன், மகேந்திரன் மற்றும் சபரி காத்திருந்தனர்.நேரம் கடத்தாமல் அங்கிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி புறப்பட்டோம். நான் கடைசியாக சென்று கொண்டிருந்தேன், கீர்த்தனாவின் மிதிவண்டி சங்கிலி பிரண்டுவிட்டது. அதை சரி செய்துவிட்டு, மேலும் தொடர்ந்தோம்.




 சோழிங்கநல்லூர் கடந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்ற பிறகு, அவர்களிடம், நாம் இதுவரை 10கிமீ வந்துள்ளோம், இப்பொழுது திரும்பி சென்றால் நீங்கள் 20கிமீ பயணித்ததாக இருக்கும். சரியா என்றேன். அவர்கள் வேண்டாம், நாம் மேலும் தொடர்வோம், பிறகு பார்க்கொள்வோம் என்று உறுதியாக சொன்னார்கள். சரி ஆர்வமாக இருப்பவர்களுக்கு எதற்கு முட்டுக்கட்டை போடுவது என்று கருதி பயணத்தை மீண்டும் கி.க.சாவில் தொடர்ந்தோம். உத்தண்டி சுங்கச்சாவடி வந்தது. அருகாமையில் இருக்கும் ஜூஹூ கடற்கரைக்கு சென்று திரும்புவோமா அல்லது முட்டுக்காடு போகலாமா என்ற கேள்வியை எழுப்பினேன்.முட்டுக்காடு வரை செல்வோம் என்று அடம் பிடித்தனர். சரி முட்டுக்காடு செல்வோம் என்று பயணத்தை துவக்கினோம். 

முட்டுக்காடு சென்று சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். பார்த்தசாரதி அவர்கள், மஹாபலிபுரம் செல்கிறேன் என்றார். சரி ஐயா, நீங்கள் தொடருங்கள், நான் இவர்களை பத்திரமாக அழைத்து செல்கிறேன் என்று தெரிவித்து, அவரை வழியனுப்பினோம். நாங்கள் கோவளம் சந்திப்பில், எலும்பிச்சை சாறு பருகினோம். எங்கள் பயணம், கேளம்பாக்கம் புறவழிசாலையில் தொடர்ந்து நாவலூர், சோழிங்கநல்லூர் வழியாக துரைப்பாக்கம் சென்றடைந்தோம். அனைவரும் சிற்றுண்டி அருந்தினோம். 

பிறகு, ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் ஒட்டினோம் என்று அலாவும் பொழுது அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 50கிமீ முடிக்கவிருக்கிறார்கள் என்று தெரிந்தது. எனக்கு பெரும் மகிழ்ச்சி. அனைவரும் பள்ளி பருவத்திற்கு பிறகு (கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகள் கழித்து) இப்பொழுது தான் ஓட்டுகிறார்கள். முதல் முறையே 50கிமீ என்பது சாதாரண விடயம் இல்லை. அப்பொழுது என்னுடைய தூரத்தை பார்க்கும் பொழுது 80கிமீ முடித்திருந்தேன். வீட்டிற்கு சென்றால் 92கிமீ வரும் என்று கூறினேன். அப்பொழுது தயவு செய்து 100கிமீ முடியுங்கள் என்றார்கள். முயற்சிக்கிறேன் என்று தெரிவித்து அவர்களிடம் இருந்து விடைபெற்றேன். வீட்டிற்கு செல்லும் வழியில் மேலும் சில நிமிடங்கள் பயணித்து 100கிமீ தூரம் முடித்தேன்.

இந்த ஆண்டு 100கிமீ தூரம் கடந்தது மிக்க மகிழ்ச்சி. இந்த பயணத்தை நண்பர்களோடு பகிர்வது பெரும் இன்பம். 




நன்றி 

Wednesday, July 3, 2024

கோப்பா அமெரிக்கா 2024 காலிறுதி போட்டிகளின் விவரம் - Copa America 2024 Quarter final list

 

அமெரிக்கா (வட & தென்) கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு இடையே நடக்கும் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டி, அமெரிக்காவில்  (யு.எஸ்) நடைபெறுகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்த  விளையாட்டில், 4 குழுக்களாக பிரித்து சுற்று .அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு குழுவிலும்  புள்ளி வரிசையில்  முதல் 2 அணிகள் தேர்வாகி  காலிறுதி போட்டியில் மோதுகின்றன.


அதன் விவரம்: -

அர்ஜென்டினா எதிராக ஈகுவடோர் 

வெனின்ஸு வேலா எதிராக கனடா 

கொலம்பியா எதிராக பனாமா 

உருகுவே எதிராக பிரேசில் 

யூரோ 2024 காலிறுதி போட்டிகளின் விவரம் - Euro 2024 Quarter final list


ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் கால்பந்து போட்டி, இந்த ஆண்டு ஜெர்மனி நாட்டில் உள்ள பல ஆடுகளங்களில் யூரோ 2024 என்று தற்பொழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்குகொண்டது. அவை 6 குழுக்களாக பிரித்து புள்ளிகளில் அடிப்படையில் 16 அணிகள் அடுத்த சுற்றான நாக்அவுட் .சுற்றிற்கு தகுதி பெற்றன.  


மேற்குறிப்பிட்டுள்ள ஆட்டங்கள் முடிந்து தற்போழுது காலிறுதி போட்டிகளுக்கு நுழைந்த அணிகள் 

 

ஸ்பெயின் 

ஜெர்மனி

போர்ச்சுகல் 

பிரான்ஸ் 

நெதர்லாந்து 

துருக்கி 

பெல்ஜியம் 

இங்கிலாந்து

மற்றும் சுசர்லாந்து.


இந்த 8 அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளின் விவரம் கீழே:-


ஸ்பெயின் எதிராக ஜெர்மனி 

போர்ச்சுகல் எதிராகபிரான்ஸ் 

நெதர்லாந்து எதிராக துருக்கி 

இங்கிலாந்து எதிராக சுசர்லாந்து


பழமொழி