இன்றைய குறள்

Saturday, February 10, 2018

காப்பு

பட்டுப்போன ஒற்றை குச்சியை
உயிர்ப்பிக்க எத்தனிக்கும் கருமேகம்
விட்டுச்செல்லும் மழைத்துளிகளோடு
காத்திருந்த தருணம்,
கரு மேகம்,
பச்சை இலைகளை ஞாபகப்படுத்தும்
இயற்கையின்
புரட்சி தருணம்

==========================

தன்னை நோக்கி பாய்ந்த நீராவிகளை,
தடுத்து துளிகளாய்
ஜனித்து,
தொகுத்து
குவித்து
குளிர்வித்து
மண்ணிற்கு ஆதாரமான மழையை
வழங்கும் முன்,
மரணித்த கொம்பிற்கு
இறுதி சடங்காக
இந்த அலங்காரமோ!!!

No comments:

Post a Comment

பழமொழி