இன்றைய குறள்

Tuesday, April 14, 2015

ஏன் இந்த பார்வைகள் பாடல் வரிகள் [ராஜதந்திரம் பாடல் வரிகள்]

படம்: ராஜதந்திரம்
பாடல்: ஏன் இந்த பார்வைகள்
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்கள்: ஜி.வி. பிரகாஷ் & சைந்தவி


ஆண்:
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ
பெண்:
காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றா
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
ஆண்:
என்னுள்ளும் நீ ஆனாய்
என் வானும் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி
ஆண்:
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண்:
வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை அங்கங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பிம்பம்யாவும் பூட்டுகிறாய்
ஆண்:
பின்னே ஓடிடும் காட்சியல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்
என்னை நான் காக்க வரைந்திருந்த
மாயக் கோடொன்றை நீக்குகிறாய்
இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் எந்தன் ஐயத்தைப் போக்குகிறாய்

ஆண்:
தேவையில்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன்
நான் ஓர் ஆண் என்ற உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்
காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆடுமடி
ஒட்டும் தீண்டாமல் பேசையிலே
வினாடி நின்று ஓடுமடி
பெண்:
இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்கக்கூடுமடா
ஒ கோ கோ
என் எண்ண குட்டைக்குள்
உன் பிம்பம் வாழத்தான்
கல் ஒன்றை போட்டாயடா

பெண்:
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ
காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள்
ஓடும் பாடல் ஒன்றா
இருவர்:
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
என்னுள்ளும் நீ ஆனாய்
என் வானும் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி (ஆனாயடா)

No comments:

Post a Comment

பழமொழி