இன்றைய குறள்

Monday, February 3, 2014

உளறல்கள்

கண்களுக்கு என் நிலை
தெரியவில்லை போல,
உன்னை நினைக்கும்
பொழுதெல்லாம்
கண்ணீரை தந்துவிடுகிறது!!!!
====================================
உன் புன்னகைக்கு
நான் காரணம்,
என் கண்ணீருக்கு
யார் காரணம்!?!
====================================
என்
உதட்டோர புன்னகையை
நீ
எடுத்துக்கொண்டு,
என்
கண்கள் ஓரமாய்
நீர் துளிகள்
தந்தாய்.......!!!
====================================
மனதோர வருத்தங்கள்
உதட்டோர புன்னகையை விழுங்கி
விழியோரம் கண்ணீரை
கொடுக்கிறது....!!!
====================================
கண்களால் காணும் பிரிவை
விட
மனதால் உணரும் பிரிவே
வலிகளை தருகிறது....!
====================================
உன்னால்
என் உள்ளம்
கலங்கிய போதும்
பளிங்கு போல
உன் முகம் பிரகாசமாய்
என்றும்............!
====================================
என்
மனதை உழுது,
வலிகளை
விதைத்து செல்ல
ஆசைப்படுகிறாய்,

சரி,
செய்துகொள்.

ஆனால்
என் உயிர்
அறுவடையாகும் முன்
நீ
வந்துவிடு.............................................!
====================================

3 comments:

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்

    பதிவாக-நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……!

    ReplyDelete
  2. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் விதைத்து மனதில்

    ReplyDelete

பழமொழி