இன்றைய குறள்

Friday, December 6, 2013

தியாகச்சுடர் அணைந்ததே!!!!!


போராளி நெல்சன் மண்டேலா உயிரிழந்தார். ௨௭ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உண்மையான இரும்பு மனிதன், தனது ௯௭ஆம் வயதில் இயற்கை எய்தினார். தென்னாப்ரிக்கா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அன்னாரின் ஆத்மா நிச்சயம் நிம்மதியாக உறங்கும். பிறருக்காக போராடிய இவர் புனிதரே. ஆழ்ந்த அனுதாபங்கள். என்னை போன்ற கருப்பர்களை நிமிர செய்த உத்தமரே, உங்கள் புகழ் இந்த பூமியுள்ள வரை தழைக்கட்டும்.... :( :( :(

http://www.foxnews.com/world/2013/12/05/mandela-dies-age-95/


உண்மையான போராளியே நீ,
உன்னத தியாகி நீ,
தன்னலம் பாராமல் பிறர்
நலத்திற்கு உழைத்தாயே,
வந்த வேலை முடிந்தது
என்று நினைத்தாயோ?
அல்லது விடுதலை வேட்கை
தணிந்தது என்று புறப்பட்டாயா?

உன் மறைவு ஓர் பேரிழப்பு,
பல கோடி கருப்பர்களை (என்னையும்)
தலை நிமிர செய்த தூயவனே,
உன் புகழ் இந்த
பூமி உள்ளவரை அழியாமல்
ஒலிக்கட்டும்

மண்டேலா மண்டேலா மண்டேலா
அன்பிற்கே அன்பை
கற்று தந்த உத்தமனே,
ஓங்குக உன் புகழ்!

தியாகமே,
உண்மையே,
இன்று அகிலமே உன்னை துதிக்கும்.
அழியும்வரை உன் புகழை காக்கும்.

வணக்கங்கள்.......

2 comments:

  1. india viduthalai ku poradiyathaga gandhi ku mahatma pattam..karu pinathiru podasiyathaga nelson mandela ku karupu gandhi pattam..oru thamil ninathiru poradiya en thalaivan mattum theevaravathi ya ?

    ReplyDelete
    Replies
    1. எங்கு தமிழனுக்கு மதிப்பிருக்கிறது என்று நினைக்கின்றீகள்...அல்லது எங்கே நாம் பத்திரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றீர்கள்... எங்குமே இல்லை... தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த தமிழினம், இன்று அடிமை இனம். வீறு கொண்டு எழுந்தது புலிப்படை. அவற்றை அடக்க 31 நாடுகள் கைகோர்த்தன. அதை ஒன்றை மட்டுமே நம்பிவிட்டோம். அதில் நம் தவறும் இருக்கிறது. கொடுக்கப்பட்டதை மறுத்தோம் மலேசியாவில். இல்லையென்றால் சொல்லிக்கொள்ள ஒரு நாடிருந்திருக்கும். ம்....

      Delete

பழமொழி