கருப்பு காவல் தெய்வம் இன்று
தான் சுவாசிப்பதை நிறுத்தியது.....
வரலாறு எழுபவர்களின் மத்தியில்,
வரலாற்றை மாற்றியவரின்
அத்தியாயம் முடிந்தது....
கோடிகளில் புரளும் தலைமைகள்
மத்தியில்,
கோடிமக்கள் இதயத்தில்
குடிகொண்ட சுடர்
ஒளியை இழந்தது....
இருளில் இருந்த கறுப்பர்களை,
வெள்ளையனை எதிர்த்து
வெளிச்சத்தை காட்டிய
கலங்கரைவிளக்கம் அணைந்தது......
இருபத்தியைந்து ஆண்டுகள்
சிறையிருட்டில் காலம்
கடத்தி,
சுதந்திர பாதை காட்டி
இன்று உலகை பிரிந்து போனது...
ஓர் இனத்திற்கு
பயணத்தை
துவக்கிக்காட்டியவரின்
பயணம் முடிந்தது.....
கண்முன்னே வாழ்ந்த மகான்,
தன்னை போல வித்தை நிறைய
மனதில் விதைத்த
தன்னலமில்லா போராளிக்கு,
ஒரு தமிழனின்
கண்ணீர் அஞ்சலி................
வணக்கம்
ReplyDeleteகவிதை எழுதிய விதம் அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதின் வலி தோழமையே...
Deletearumai anna mega arumai
ReplyDelete