இன்றைய குறள்

Saturday, December 7, 2013

ஆழமான உணர்வு


காதல்.

இரு மனங்களின் சங்கமம்
உள்ளம் அனுபவிக்கும் உணர்வு போதை..

வார்த்தைகள் மெளனமாகி
கண்கள் பேசும்
கவிதை...

புறக்கண் மூடி
அகக்கண் திறந்து
அன்பை ரசிக்கும்
அழகு....

தோல்வியை மட்டுமே
சந்தித்து
புண்பட்ட மனதை
வருடும் அழகான
தென்றல்.....

அழகை கண்ணால்
பார்க்காமல்
மனதால் பார்த்து,
நேசிக்கப்பட்டும்
நேசித்த
மகிழ்ச்சியின் உச்சம்......

நெருப்பை குளிர் போலவும்
குளிரை தணல் போலவும்
மாற்றும் சக்தி,
இயற்கையையே
ஏமாற வைக்கும்
அதிசயம் கண்களில்
காணும் கணத்தில்.......

உள்ள எண்ணத்தை
கண்ணாடியாக
பிரதிபளிக்கும் உதடுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்
வேதவாக்காக
மாறி,
கடவுளையும் காதலில்
காட்டும் சித்து விளையாட்டு........

உடையில் மாற்றம்
நடையில் மாற்றம்
உணவில் மாற்றம்
பேச்சில் மாற்றம்
நடத்தையில் மாற்றம்
ஏன், மதத்திலும் கூட மாற்றம்
அனைத்தையும் கடந்து
மரணத்தையும் மறக்கடித்கிறது,
உள்ளத்தில் நேர்ந்த காதல் மாற்றம்.........

கோடிகள் வேண்டாம்
பண்டபாத்திரம் வேண்டாம்
நகைகள் வேண்டாம்
வாகனம் வேண்டாம்
சாதிகள் வேண்டாம், சரி.
மாறாக,
பெற்றோர்கள்
கூட வேண்டாம்
என்று ஒதுக்கும்
காதல் அறிவிலித்தனமும் கூட..........

2 comments:

  1. செம அண்ணா !!!!
    காதல் என்பது ஒருவகை உணர்வு என்றாலும் ..அது ஓவவரு மனதுக்கும் இரண்டாம் உலகம் தான் !!!

    ReplyDelete

பழமொழி