கண்ணுறங்க நான்
யோசித்ததில்லை,
தாலாட்டு பாட நீ
இருக்கும் பொழுது
அம்மா!
தவழ்ந்த நான்
தத்தி
நடக்க அஞ்சவில்லை,
கரம் நீட்டி
பிடிக்க நீ
இருக்கும் பொழுது
அம்மா!
உலகை பார்த்து
நான்
வியக்கவில்லை,
நான் பார்த்து
வியந்த உலகம்
நீ தானே அம்மா!
பிறவி அடுத்து
உண்டு எனில்
உடன்பிறப்புகளுக்கு வேண்டாம்
எனக்கே
வரத்தை கொடு
என் கருவில்
நீ பிறப்பாய் என்று!!!!!
அருமை... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தோழரே
DeleteNice Lines anna.. About amma
ReplyDeleteநன்றி ஜனனி
Deleteஅற்புதமான கவிதை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Delete