சுதந்திரமே மூச்சாக கொண்டு
உயிரை இனத்திற்காக
துறந்த இலட்சிய வேங்கைகள்...
புதைக்கப்பட்டிருந்தும், மக்களினுள்
தாயகத்தை மீட்கும்
தாக்கத்தை வளர்த்தவர்கள்...
மடிவோம் என தெரிந்தும்
மண்ணை காக்க, அஞ்சாமல்
வீரத்தோடு களமாடியவர்கள்...
இனத்தை காக்க கண்ணயராமலும்,
சொந்தத்தை பிரிந்தாலும்
தாய் மண்ணை விட்டு பிரியாமல்
கண்மூடிய பிறகும்
மண்ணுக்கே உடலை உரமாக்கி
சுதந்திர வேரை
மக்கள் மனதினுள் ஊடுற வைத்த
உன்னதமானவர்கள்......
மாவீர்ரகளின் தியாகச்சுடர்களால்
ஒளிறும் தமிழீழம்
நிச்சயம் மலரும்
No comments:
Post a Comment