பட்டு போன
என்னுள்
உன் நினைவுகள்
துளிர்த்து
படர்ந்தது எங்கும்
==========================
உன் நினைவு
சாரலில்
நித்தமும்
நனைகிறேன்....
மழைத்துளிகளாய்
நீ முத்தமிடுகிறாய்
==========================
நீ தந்த
காயத்தின்
மருந்தும்,
நீ தந்த
உன் நினைவுகள் தான்
==========================
தொலைந்த உன்னை
மீண்டும் கிடைக்கப்பெற்றேன்
என் நினைவுகளில்
==========================
தூரம் சென்ற
உன்னை
அருகில் அழைத்து
வந்தது,
அழகான நினைவுகள்
========================================
முத்தமிட்டு சென்ற
கடலலைகள்
உன்னையே
ஞாபகப்படுத்துகிறது.
ஆனால் அவை
மீண்டும் கடலினுளே புகும்
உன் நினைவலைகள்
என்றும் என் மனதில் ஓயாமல்
No comments:
Post a Comment