இன்றைய குறள்

Thursday, July 5, 2012

ஓயாத நினைவலைகள்


இன்று
பிரிந்திருந்தாலும்
என்றாவது இணைவோம்
என்ற நம்பிக்கையில் ,
உன்
நினைவு என்ற
பொக்கிஷத்தை என்னுள்
சுமந்துகொண்டு பிரிகிறேன்..............

=====================

நம் காதலில்
எனக்கு
உன்னுடைய நிரந்தர
பரிசு,

உன் நினைவுகள் மட்டுமே!

=====================



குப்பையாகும்
காகித பேழையினுள்
நீ சுற்றிகொடுத்த
ஊமை பரிசுகளைவிட,
பசுமையூட்டும்
நீங்கா
நினைவுகளே என்னுள்
சாகாது நிலைகொள்கிறது!

=====================



இலைகள்,
தளிரான காலத்தை
எண்ணி,
உதிர்ந்து போகும்
இலையுதிர்காலம்
என்பது,
உன் நினைவுகளை நான் சுமப்பது..........

=====================

என் இருண்ட
வாழ்வில்
மின்மினி பூச்சிகளாய்
பறக்கும்
உன் நினைவுகள்!

=====================



என் காதல்
பயணத்தில்
நான் இறங்கிய
நிறுத்தம்,
உன் நினைவுகள்
அடங்கிய நிழற்குடையை
தாங்கி நின்றது!

=====================




நான் கடந்து வந்த
காதல் பாதையில்,
என் பாதசுவடுகளே
மிச்சம் என்றெண்ணி,
திரும்பி பார்க்கையில்
அழியாத கல்வெட்டுகளாய்
உன் நினைவுகள்!

=====================

மார்கழி கடும் குளிரில்
இதமான வெப்பமாக உன் நினைவுகள்


சுட்டெரிக்கும் சித்திரையில்
சுகமான இளந்தென்றல் உன் நினைவுகள்............

2 comments:

  1. வார்த்தைகளில்
    வார்க்கப்பட்டு
    உறைந்து நிற்கும்
    காதலை இனம் காண முடிகிறது ...........அருமையான வெளிபாடு

    ReplyDelete
  2. நன்றி தோழர் கோவை மு. சரளா அவர்களே.

    ReplyDelete

பழமொழி