இன்றைய குறள்

Friday, December 23, 2011

சுனை நீர்


பூவுக்குள்
தித்திக்கும் சுனை நீர்
தேன்

==========================

என்னுள் சுரக்கும்
சுனை நீர்
உனக்கா?
என்று தேன் பருகும்
வண்ணத்துப்பூச்சியிடம்
கேட்கிறது
மலர்ந்த மலர்!



மலரினுள் சுரக்கும்
தேன்
உனக்காக தானா?
இப்படி
ஒய்யாரமாக
அமர்ந்து
பருகுகிறாயே.
வண்ணத்துப்பூச்சியே!

=================================================

தனக்காக
மலர்
தேனை
அதனுள் சுரக்கிறது
என்று நினைத்து
இறுமாப்போடு
பருகுகிறது
வண்ணத்துப்பூச்சி!



தன்னுள் சுரக்கும்
தேன்
களவாடப்படுவதை
எண்ணி கண்ணீர்
வடிக்கிறது
மலர்.

No comments:

Post a Comment

பழமொழி