இன்றைய குறள்

Sunday, December 11, 2011

எழுவோம்



பகையோடு மோத
பலமாக இரு.

எதிரியை வீழ்த்த
எச்சரிக்கையாக இரு.

துவண்டு போகாமல்
துடிப்போடு இரு.

உலர்ந்து போகாமல்
உறுதியாக இரு.

தளர்ந்து போகாமல்
தவிப்போடு இரு.

சிதைந்து போகாமல்
சிறப்பாக இரு.

ஒழிந்து போகாமல்
ஒற்றுமையாக இரு.

இனத்தை மீட்க
இணைந்து இரு.

வீழ்ந்து போகாமல்
விழித்திரு.

3 comments:

  1. aaha enna oru nalla kavithai nanba...nice :)

    ReplyDelete
  2. அருமை தோழரே இளைஞர்களுக்கான உற்சாகபானம் போல் உள்ளது உங்களுடைய கவிதை

    ReplyDelete
  3. நன்றி தோழர் சானு மற்றும் சுரேந்தர்.....

    ReplyDelete

பழமொழி