
நம்முடைய இனத்தின்
பழமையையும்,
பெருமையையும்,
மொழியின் வளமையையும்,
பின் வரும்
தலைமுறைக்கு
புகுத்தி
விதைக்கவேண்டும்.
அப்பொழுது தான்
வேராக ஆழ பதிந்து
மரமாகி நிறைய
பேருக்கு நிழல் தரும்.
பூவாக பூத்து
காயாக காய்த்து
கனிந்து பலம் தரும்.
நம் பெருமை புரியாத
நம்
மக்களுக்கும் எடுத்துரைக்கும்.
நான் தமிழனாக பிறந்தது பெருமை. என் கடமையுள் இதுவும் ஒன்று.
ஆலமரத்தின் விழுது ஒரு நாள்
வேராகி அதே மரத்திற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment