வருத்தம் வந்து நெஞ்சை நெரித்தாலும்
துன்பம் வந்து பாதையை மறைத்தாலும்
ஏமாற்றம் வந்து கனவுகளை சிதைத்தாலும்
நான் எழுவேன், நான் எழுவேன்
காயம் வந்து உடலை வலித்தாலும்
துரோகம் வந்து நம்பிக்கையை உடைத்தாலும்
இனம் மறைத்து அடையாளம் அழித்தாலும்
மொழி அடக்கி குரலை மறைத்தாலும்
நான் எழுவேன், நான் எழுவேன்
No comments:
Post a Comment