இன்றைய குறள்

Friday, October 24, 2025

50000கிமீ மிதிவண்டியில் கடந்த நண்பர்களுக்காக

சில ஆண்டுகளில் பல பயணங்கள் 
பசுமை நிகழ்வுகளை நிகழ்த்தி, 
நினைவு பெட்டகத்தில் சேமித்த பயணங்கள். 

எண்ணி மகிழ்ச்சியுற பல இருக்கும். 
சவால்கள் நிறைந்திருக்கும் பயணங்கள் 
அனைத்தும் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது.

சாலைகள், மனிதர்கள், 
காடுகள், மலைகள், 
வெயில், மழை, குளிர்,
என எதிர்கொண்ட பயணங்கள் இவை.

இது வெறும் பொழுது போக்கும் பயணங்கள் அல்ல,
பேரார்வம், 
தைரியம்,
போர்குணம்,
ஒழுக்கம்,
உள்ள உறுதி, 
பெரும் இலட்சியம்
அனைத்தையும் ஒருங்கிணைத்த பயணங்கள்.

சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்!!!

ஒரு வெற்றி வீரன் இந்த தற்காலிக வெற்றியோடு நிறக்கப்போவதில்லை.
அவன் கால்கள் தினவெடுத்து காத்திருக்கிறது,
அவன் விழிகள் சவால்களை நோக்கி எதிர்கொண்டிருக்கிறது 
அடுத்தது என்ன என்ற எண்ண ஓட்டங்கள் இருக்கிறது.

அவன் இங்கு பறை சாற்றியிருப்பது ஒரே ஒரு கூற்றை,
நினைத்தால் சாதிக்கலாம் என்பதே அது.

அவனுடைய சோம்பலை அவனே தீயிட்டான், புரட்சியாளன் ஆனான் 
தட்பவெப்ப தடைகளை தகர்த்தெறிந்தான், சாதித்தான் 

அவனுக்கு முன்னோடி சிலர்,
பலருக்கு முன்னோடி அவன் 

பாதைகள் பல காத்திருக்கிறது
அவன் தடம் காண 

மீண்டும் புறப்பட்டுவிட்டான்
அடுத்த இலக்கை நோக்கி. 

வாழ்த்துகள்  






Wednesday, July 2, 2025

தாலாட்டு பாட்டு - 3

குட்டி குட்டி விழிகள் மூடி
உறங்க வேண்டும் மயூரா 
நீ உறங்க வேண்டும் மயூரா 
அழகா உறங்க வேண்டும் மயூரா 

கேள்வி கேட்க யாருமில்லை 
இளைப்பாறு மயூரா 
நீ இளைப்பாறு மயூரா
சுகமா இளைப்பாறு மயூரா

பிஞ்சு கால்களை உதைத்துக்கொண்டு 
தூக்கம் தொலைக்காதே மயூரா 
நீ தூக்கம் தொலைக்காதே மயூரா
நல்ல தூக்கம் தொலைக்காதே மயூரா

கை இரண்டும் ஆட்டிவிட்டு 
தூளி திறக்காதே மயூரா
கண்மூடி தூங்கு மயூரா
நீ கண்மூடிதூங்கு மயூரா

ஆராரோ நானும் பாட 
தூங்க வேண்டும் மயூரா 
மெல்ல  தூங்கவேண்டும் மயூரா 
நீ தூங்கவேண்டும் மயூரா 

ஆடிவரும் தொட்டிலிலே 
அசைந்து தூங்கு மயூரா 
நீ அசைந்து தூங்கு மயூரா 
மெல்ல அசைந்து தூங்கு மயூரா 

பாட்டியோட புடைவையிலே 
படுத்து உறங்கு மயூரா 
நீ படுத்து உறங்கு மயூரா 
சமத்தா படுத்து உறங்கு மயூரா 

Tuesday, June 17, 2025

தாலாட்டு பாட்டு - 2

 நள்ளிரவு நேரத்திலே, நீ 
அமைதியாக தூங்கவேண்டும் ; 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

குட்டி குட்டி கண்ணை உருட்டி , நீ 
இருளில் எதையோ தேடுகிறாய் 
சின்ன கழுத்தை தூக்கியே, நீ 
எதனை நிமிர்ந்து பார்க்கின்றாய் 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

மழலை குரலில் குலவை போட்டு 
உறக்கம் மறந்து என்னை உசுப்புகிறாய் 
இரவு பொழுதினில் குலவை சத்தம் 
என் காதை தைத்து எழுப்பியது 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

ஆராரிரோ பாடி உன்னை 
தூங்க வைக்க முயல்கிறேனே 
குட்டி கை, காலை ஆட்டி, நீ 
தூங்க மறுத்து ஆடம் பிடிக்கிறாய் 
ஆரிராரோ தங்க மகனே 
நீ மெல்ல மெல்ல விழிமூடு 
உறக்கம் உன்னை ஆட்கொள்ளவே  
ஆரிராரோ நானும் பாட 
அரிராரோ ஆரிராரோ 
ஆராரிரோ ஆரிராரோ 
தாலேலோ தாலேலோ 
தாலேலோ தாலேலோ

தாலாட்டு பாட்டு - 1

மெல்ல மெல்ல சூரியனும் 
நம்மைவிட்டு தூரமாக (2)
விலகி போனதே;
அது,  
பகலை விழுங்கி போனதே;
வெளிச்சம் மறைந்து போனதே 
ஆராரோ ஆரிராரோ 
ஆராரோ ஆரிராரோ 

வெள்ளியும் முளைக்குதே 
நட்சத்திரங்கள் ஜொலிக்குதே (2)
நேரமும் ஆனதே கண்ணே; நீ 
கண்ணுறங்கும் நேரம் ஆனதே ஆஆ
கண்ணுறங்கும் நேரம் ஆனதே 
ஆராரோ ஆரிராரோ 
ஆராரோ ஆரிராரோ 

பழமொழி